அன்புள்ள நோன்பாளிகளே! சகோதர! சகோதரிகளே
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு!
நாம் எல்லோரும் இன்று ரமலான் மாத்தில் இருக்கிறோம் இக்காலகட்டத்தில் நாம்ரமலானின் மகத்ததுவத்தை அறிந்துக்கொண்டு நோன்பிருந்தால் நாம்வெற்றிபெறுவது (இன்ஷா அல்லாஹ்) நிச்சயம்! அல்ஹம்துலில்லாஹ்!
சகோதரர்களே! இங்கு சுட்டிக்காட்டப்படுபவைகள் நமக்காக பனியிலும்வெயிலிலும் வாடி வதங்கும் ராணுவ வீரர்களை கேலி செய்யும் விதமாக அல்லமாறாக ராணுவத்தில் அளிக்கக்கூடிய பயிற்சிகளைத்தான்சுட்டிக்காட்டப்பட்டுள்ளது! ராணுவபலம் நாட்டுக்கு இன்றியமையாததுதான்அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை!
இங்கு ராணுவப்பயிற்சியை மிஞ்சும் ரமலான் பயிற்சிகள் என்ற தலைப்பு ஏன்கொடுக்கப்பட்தன்றால் மனிதனால் உருவாக்கப்பட்ட பயிற்சிகளிலேயே மிக உயர்ந்தபயிற்சியாக கருத்ப்படவது ராணுவப்பயிற்சிதான்! அதைவிட சிறந்த பயிற்சிகள்என்று எதையும் கருதமுடியாது காரணம் அதுதான் நாட்டின் முதுகெலும்பாகஉள்ளது! ராணுவம் இல்லையென்றால் ஒரு நாட்டை ஆல்வது சிரமமான காரியம்!மேலும் ராணுவபலம் இல்லாத நாடுகளை எடுத்துக்கொண்டால் அவர்கள் பிறரை அண்டிபயந்து ஒடுங்கிதான் வாழவேண்டிய நிர்பந்தம் ஏற்படும்! எனவேதான் ஒவ்வொருநாடும் தத்தமது இராணவ பலத்தை பெறுக்கிக்கொள்ள இந்தப் பயிற்சிகளுக்குமுக்கியத்துவம் அளித்து அதிகமதிகம் பொருளாதாரத்தை செலவிடுகிறது!
சரி! ராணுவப்பயிற்சியை பற்றி பார்த்தோம் இனி நம்முடைய இஸ்லாமியபயிற்சிகளிலேயே சிறந்த பயிற்சியாக கருதப்படும் ரமலான் பயிற்சியைபார்ப்போமா?
நோன்புக்காலங்களில் அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து சஹ்ரு உணவைஉண்டு பிறகு அந்திப்பொழுது முதல் சூரியன் மறையும் மாலைவேலை வரை வெரும்வயிற்றில் எந்த ஆகாரமும் ஏன் தண்ணீர் கூட அருந்தாமல் பசியோடு இருந்து 5வேளை தொழுகைகள் மேற்கொண்டு அல்லாஹ்வைப் பிரார்த்திப்பதுதான் ரமலான்நோன்பு என்று பெருவாரியான மாற்று மத மக்களிடமும் என் நம் சமுதாயத்தில்ஒரு சிலரும் எண்ணுகின்றனர் ஆனால் இந்த மாதம் அப்படிப்பட்டது அல்ல மாறாகஇதன் நோக்கமே வேறு! அதை ஆராய்ந்து சிந்தித்து பார்த்தால்தான் இந்தமாதத்தின் மகத்துவம் விளங்கும் மேலும் ஒவ்வொன்றும் விளங்கிச்செய்தால்தான் நாம் நன்மையை அதிகமதிகம் பெற்று சுவனம் செல்ல இயலும்
அல்லாஹ்வின் அறிவுரை
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَاكُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
விசுவாசங்கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீதுகடமையாக்கப்பட்டிருந்தது போன்று உங்கள் மீதும் நோன்பு(நோற்பது)கடமையாக்கப்பட்டிருக்கின்றது. (அதனால்) நீங்கள் (உள்ளச்சம் பெற்று)பயபக்தியுடையவர்களாகலாம். (அல்குர்ஆன் 2:183)
இராணுவ பயிற்சி மற்றும் ரமலான் பயிற்சியின் வேறுபாடுகளை காண்போமா!
ரமலானுக்கு ஒரே ஒரு மார்க்கம் போதும் அது இஸ்லாம்
ராணுவத்தில் பயிற்சிக்கு தலைமைதாங்குபவர் ராணுவத்தளபதி
ரமலான் பயிற்சிக்கு தலைவன் அல்லாஹ் (சுப்ஹானல்லாஹ்)
“நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சிஉங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை(எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன்” (அல்-குர்ஆன் 3:120)
ராணுவத்தில் அளிக்கப்படும் பயிற்சிகள்துப்பாக்கி சுடுதல், எதிரியை எவ்வாறு தாக்குவது, எவ்வாறு விமானத்தின்பற்நதது குண்டு வீசி எதிரிநாட்டு மக்களை கொல்வது, எவ்வாறு அந்த எதிரிநாட்டை பிடிப்பது என்ற கோரமான பயிற்சிகள்
ரமலானில் அளிக்கப்படும் பயிற்சிகள்
எந்த மனிதனுக்கும் தீங்கிழைக்காமல் இருப்பது! பொய், புறம், களவாடுதல்,விபச்சாரம், கேளிக்கூத்துக்களில் ஈடுபடாமல் இருப்பது! பொதுமக்களுக்குமனிதாபிமான அடிப்படையில் சேவை செய்தல்! நன்மையே பேசுதல்! உண்மையேபேசுதல்!
ராணுவப்பயிற்சிக்குரிய தகுதிகள்
இவ்வளவு உயரம், எடை என்று இருக்க வேண்டும்! உடலில் எந்த சிறு குறைபாடுகள்இருக்கக்கூடாது!
ராமலான் பயிற்சிக்குரிய தகுதிகள்
முஸ்லிம் என்ற தகுதியே போதும் அவன் பருவவயதை அடைந்த ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும் உடல் குறையுள்ளவராக இருந்தாலும், முதியவராகஇருந்தாலும் எல்லோருக்கும் பயிற்சிகள் உண்டு.
ராணுவ பயிற்சிக்கு இவர்களுக்கு சலுகைகள் இல்லை
முதியவர், சிறு பிள்ளைகள், ஒள்ளியானவர், குண்டானவர், பெண்கள், உடல்குறைபாடு உள்ளவர்கள், மற்றும் நோய் நொடியுள்ளவர்கள்
ரமலான் பயிற்சிக்கு இவர்களுக்கு சலுகைகள் உண்டு
நோயாளி, பிரயாணி, .மாதவிடாய் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும்தாய்மார்கள், முதியவர்கள்
மேற்குறிப்பிட்ட ஆறு விதமான நபர்களுக்கு ரமளான் மாதத்தில் நோன்பை விட்டுவிடுவதற்கு அனுமதியுள்ளது. எனினும் இவர்கள், விட்ட நோன்பை அவர்களுக்குஏதுவான மற்ற நாட்களில் வைத்தாக வேண்டும். எப்போழுதுமே நோன்பு வைக்கஇயலாதவர்கள் அதற்கு பரிகாரமாய் ஒரு நோன்பிற்கு ஒரு ஏழைக்கு உணவளிக்கவேண்டும். இப்படிப்பட்ட நிலையிலும் இவர் நோன்பின் பயிற்சி எடுக்கலாம்!சலுகை காட்டப்படுவார்கள்!
ராணுவ பயிற்சியால் என்ன லாபம்?
தாய்நாட்டை காப்பது! எதிரிநாட்டை சூரையாடுவது, பொதுமக்களுக்கு அரணாகஇருப்பது! போரின்போது எதிரிநாட்டு மக்களை அழிப்பது! (அமெரிக்காவின்கூட்டுப்படையும் இராக் நாட்டு மக்களுமே இதற்கு சிறந்த உதாரணம்)
ரமலான் பயிற்சியால் என்ன லாபம்?
ராணுவ பயிற்சியில் வெற்றிபெற்றால் பரிசு
அடுக்கடுக்கான பதவி உயர்வுகள்! இறுதியாக ராணுவ தளபதி என்ற அந்தஸ்து கூட(இன்ஷா அல்லாஹ் கிடைக்கலாம்) அவ்வளவுதான்! நாட்டுக்காக போரில் வீர மரணம்எய்தால் தியாகி என்ற பட்டம் கிடைக்கும்!
ரமலான் பயிற்சியில் வெற்றிபெற்றால் பரிசு –”ரய்யான்”
'நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு வாயில் இருக்கிறது, அதற்கு ரய்யான் என்றுசொல்லப்படும். அவ்வாயில் வழியாக நோன்பாளிகள் மாத்திரம் நுழைவார்கள்,அவர்கள் தவிர வேறு யாரும் அவ்வழியே நுழைய மாட்டார்கள், அவர்கள்நுழைந்தவுடன் அவ்வாயில் மூடப்பட்டு விடும்' என நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).
ராணுவ பயிற்சி நிறைவு பெற்றால்
ராணுவ வீரர்களின் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், சீட்டியடிப்பது,கேளிக்கை விருந்துகள் இருதியாக சாம்பியன் என்ன போதைதரும் மதுபாணம்!இறுதியில் ஹராமான விருந்து!
ஈத் முபாரக்! குடும்பத்துடனோ நண்பர்களுடனோ ஈகைப் பெருநாள் கொண்டாட்டம்!செல்லுமிடங்களிளெல்லாம் அஸ்ஸலாமு அலைக்கும் - ஈத்முபாரக் என்ற அழகியவாழ்துக்கள்! புத்தாடைகள், ஏழைகளுக்கு ஜகாத், பித்ரா தானங்கள் வழங்கிஅவர்களும் பெருநாள் கொண்டாட வழிவகை செய்வது! இறுதியில் வயிறார சுவையானஹலாலான விருந்து!
மனிதனை சீர்திருத்தவேண்டும் அவன் சுயக்கட்டுபாடு கொள்ள வேண்டும் என்பதேநோன்பின் நோக்கமாகும்!
சகோதரர்களே வீணான காரியங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு நோன்புகளைவீணாக்கிவிடாதீர்கள்! இந்த நோன்பு நமக்கு இறுதியாகக்கூட இருக்கலாம்!அடுத்த நோன்புகள் நமக்கு கிடைக்காமல் கூட போகலாம் ஏனெனில் யாருடையமரணமும் எவர் கையிலும் இல்லை அல்லாஹ்வே தீர்மாணிக்கிறான்! சிந்தியுங்கள்பொறுமை மேற்கொள்ளுங்கள் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை அதிகமதிகம்படித்து சுவனப்பாதையை எளதிதாக்கிக்கொள்ளுங்கள்!
சகோதரர்களே சிந்தியுங்கள்
அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம்கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனைசெய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்;அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும்.அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்’ என்று கூறுவீராக’ (அல்-குர்ஆன்2:186)
எல்லா மனிதர்களும் தவறு செய்பவர்களே! தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள்மன்னிப்பு தேடுபவர்களே!’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அனஸ் (ரலி), ஆதாரரம் : திர்மிதி
சமாதானம் உண்டாக்க வேண்டும்
நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே! ஆகவே, உங்கள் இருசகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள். இன்னும் உங்கள்மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். 49:10
அல்லாஹ்வின் மீது பயம் இருக்க வேண்டும்
“நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்துகொள்ளுங்கள்” (அல்-குர்ஆன் 9:36)
அல்லாஹ்வுக்கு பயந்து வாழ்பவர்களுடைய கூலி
“அத்தகையோருக்குரிய (நற்) கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும்,சுவனபதிகளும் ஆகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும்;அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பர்; இத்தகைய காரியங்கள் செய்வோரின் கூலிநல்லதாக இருக்கிறது” (அல்-குர்ஆன் 3:136)
“எவர் தம் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டார்களோ அவர்கள்கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின்பால் கொண்டு வரப்படுவார்கள்; அங்குஅவர்கள் வந்ததும், அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களைநோக்கி: ‘உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், நீங்கள் மணம் பெற்றவர்கள்;எனவே அதில் பிரவேசியுங்கள்; என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்’ (என்றுஅவர்களிடம் கூறப்படும்)” (அல்-குர்ஆன் 39:73)
“நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளிலும், (இறையருளில்)இன்புற்றும் இருப்பார்கள். அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அளித்ததைஅனுபவித்தவர்களாகயிருப்பார்கள் - அன்றியும், அவர்களுடைய இறைவன் நரகவேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொண்டான். (அவர்களுக்குக்கூறப்படும்:) ‘நீங்கள் (நன்மைகளைச்) செய்து கொண்டிருந்ததற்காக,(சுவர்க்கத்தில்) தாராளமாகப் புசியுங்கள், பருகுங்கள்.’ அணி அணியாகப்போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்;மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம்முடித்து வைப்போம்” (அல்-குர்ஆன் 52:17-20)
நோன்பாளிகளே சற்று இவர்களுக்காகவும் துவா கேட்டுக்கொள்ளுங்களேன் அல்லாஹ்மகிழ்வான்!
- பெற்றோருக்காக!
- பிள்ளைகளுக்காக!
- உங்கள் கணவர் மற்றும் மனைவிமார்களுக்காக!
- உடன்பிறந்த மற்றும் உடன்பிறவா சகோதர சகோதரிகளுக்காக!
- உற்றார் - உறவினர்களுக்காக!
- பெற்றோர் இல்லாத அநாதைகளுக்காக!
- பெற்றோர் இருந்தும் கவனிப்பாரற்று திரியும் குழந்தைகளுக்காக!
- பிள்ளைகள் இருந்தும் கவனிப்பாரற்று திரியும் பெற்றோருக்காக!
- பிள்ளைகள் இல்லாமல் அவதிப்படும் முதியவர்களுக்காக!
- கைம்பெண்களுக்காக, அவர்களின் மறுவாழ்வுக்காக!
- உடல் குறைபாடுள்ளவர்களின் வாழ்வாதாரத்திற்காக!
- வறிய நிலையில் உள்ள ஏழை மக்களுக்காக!
- குடும்பத்ததை விட்டுப் பிறிந்து அயல்நாடுகளில் வாழும் நம்அன்புச்சகோதரர்களுக்காக!
- அயல் நாடுகளில் வாழும் சகோதரர்களை பிறிந்து வாடும் அவர்களின்குடும்பங்களுக்காக!
- அநியாயமாக சிறைகளில் அவதிப்படும் முஸ்லிம் உள்ளிட்ட அனைத்துபொதுமக்களுக்காக!
- அடுத்த வேலை உணவின்றி தவிக்கும் ஆப்ரிக்க மக்களுக்காக!
- இராக் போன்ற நாடுகளில் அவதிப்படும் முஸ்லிம்களுக்காக!
- இலங்கை போன்ற நாடுகளில் அவதிப்படும் முஸ்லிம் அல்லாதவர்களுக்காக!
- தாய்நாட்டில் மதக்கலவரங்கள் நிகழாமல் இருக்க!
- அயல்நாடுகளிலும் அமைதி நிலவ!
- தொலைக்காட்சிகளில் இணைதளங்களில் வரும் கேவலமான ஆபாச நிகழ்ச்சிகள் அறவேஒழிய!
- இந்த நிகழ்ச்சிகளை மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் வெறுக்க!
- இறுதியாக நம் குலத்து ஆண்கள் மற்றும் பெண்கள் காதலித்து மார்க்த்தைவிட்டு ஓடாமலிருக்க!
- எல்லோருக்கும் நேர்வழி கிடைக்க! மார்க்கத்தில் உள்ள குழப்பங்கள் நீங்க!
அல்ஹம்துலில்லாஹ் - எல்லாப்புகழும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே
0 comments:
கருத்துரையிடுக