வெள்ளி, 8 ஜனவரி, 2010

மதங்களை விமர்சிக்கலாம்; அவதூறு கூடாது: உயர் நீதிமன்றம்!


இஸ்லாம் உள்பட எந்த மதத்தையும் விமர்சிக்கத் தடை கிடையாது. ஆனால் அவதூறான கருத்துக்களையோ துவேஷமான பிரசாரமோ கூடாது, அதை ஏற்க முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
ஆர்.வி.பாசின் என்பவர் 'Islam - A concept of Political World Invasion By Muslims' என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகம் முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகக் கூறி மகாராஷ்டிர அரசு 2007ம் ஆண்டு தடை விதித்தது. இதை எதிர்த்து பாசின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தடையை உறுதி செய்து உத்தரவிட்டது.
இஸ்லாம் உள்பட எந்த மதத்தையும் விமர்சிக்கலாம். ஆனால் மதத்தை அவதூறு செய்வதையோ துவேஷமாக பிரசாரம் செய்வதையோ ஏற்றுக் கொள்ள முடியாது என்று உயர் நீதிமன்றம் கருத்து கூறியது. குரானின் வசனங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவே இருக்க வேண்டும். மேலும் குர்ஆன் வசனங்களை விமர்சிக்கும்போது அதன் வரலாற்றுப் பின்னணியை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

0 comments:

கருத்துரையிடுக