புதன், 3 மார்ச், 2010

கோவில் சுரங்க அறையில் விபசாரம் நடத்திய சாமியார் கைது

சத்ய சாய்பாபாவின் சீடர் என்று தன்னை பிரபலப்படுத்திக் கொண்டு கான்பூர் பகுதியில் வசித்து வருபவர் சிவ்முரத் திவேதி (39). இவர் கான்பூரில் சாய்பாபா பெயரில் பெரிய கோவில் கட்டி உள்ளார். அக்கோவிலில் தினமும் பஜனைப் பாடல்களை பாடியும் சொற்பொழிவுகளை நிகழ்த்துவதும் வழக்கம். டெல்லியில் இவருக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர் மேலும் இவருக்கு டெல்லியில் உள்ள அரசியல்வாதிகளிடமும் பழக்கம் ஏற்பட்டதால் அவர் டெல்லியில் புகழ் மிக்க சாமியாராக வலம் வந்தார்.
இந்நிலையில் சாமியார் சிவ்முரத் திவேதி இந்து மதத்தை கேடயமாக வைத்துக் கொண்டு விபசாரம் செய்து வருவதாக புகார்கள் வந்தன. இதனால் சந்தேகம் அடைந்த டெல்லி போலீசார் சிவ்முரத் திவேதி யையும் அவரது கோவில், வீடுகளையும் கண்காணித்தனர். போலீஸ் விசாரணையில் கான்பூர் சாய்பாபா கோவிலில் சுரங்க அறைகள் இருப்பதும் அங்கு விபசாரம் நடப்பதும் உறுதியாக தெரிய வந்தது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை போலீசார் சிவ்முரத் திவேதியின் கோவிலில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு விபசாரம் நடந்து கொண்டிருப்பது தெரிந்தது.
இதனை தொடர்ந்து உடனடியாக போலி சாமியார் சிவ்முரத் திவேதி கைது செய்யப்பட்டார். அவருடன் விபசாரத்தில் ஈடுபட்டிருந்த 2 விமானப்பணிப் பெண்கள், கல்லூரி மாணவிகள் 2 பேர் பிடிபட்டனர். இந்தி படங்களில் நடித்து வரும் துணை நடிகை ஒரு வரும் இந்த வேட்டையில் சிக்கினார். மேலும் டெல்லியில் உள்ள பணக்காரர்களின் வீடுகளுக்கு செல்ல தயாராக இருந்த இளம் பெண்களும் போலீசாரிடம் பிடிபட்டனர்.
போலி சாமியாரின் பாபா கோவில் முழுக்க போலீசார் சோதனை நடத்தி னார்கள். அப்போது 5 டைரிகள் கிடைத்தன. அந்த டைரிகளில் இந்தியா முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான பெண்களின் முகவரிகள், போன் நம்பர்கள் இருந்தன. அவர்கள் அனைவரையும் போலி சாமியார் சிவ்முரத் திவேதி விபசாரத்தில் ஈடு படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் போலி சாமியாரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

0 comments:

கருத்துரையிடுக