புதன், 18 ஆகஸ்ட், 2010

டாடா நிறுவனங்களில் 1,63,700 பேருக்கு வேலை; தனியார் நிறுவனங்களில் புதிய சாதனை

தகவல் தொழில் நுட்ப புரட்சி ஏற்பட்ட பிறகு இந்தியாவில் உள்ள முன்னணி தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது. இந்தியர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கொடுப்பதில் ஐ.டி. நிறுவனங்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தியாவில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனங்களில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்.) நிறுவனம் அதிக ஊழியர்களுடன் முதல் இடத்தில் உள்ளது. அந்த நிறுவனத்தில் கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி கணக்கெடுப்பின் படி 1 லட்சத்து 63 ஆயிரத்து 700 பணியாளர்கள் வேலை பார்த்து வருவது தெரிய வந்துள்ளது. இரண்டாவது இடத்தில் ஐ.பி.எம். நிறுவனம் உள்ளது. 
இந்த நிறுவனத்தில் 1 லட்சத்து 55 ஆயிரம் பேர் உள்ளனர். உலகம் முழுக்க உள்ள ஐ.பி.எம். அலுவலகங்களில் 4 லட்சம் பேர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் உள்ள ஐ.டி. நிறுவனங்களில் 2-வது பெரிய நிறுவனமாக “இன் போசிஸ்” நிறுவனம் கருதப்படுகிறது. இந்த நிறுவனத்தில் 1 லட்சத்து 14ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர். 2007-ம் ஆண்டுக்குப் பிறகு ஐ.டி. நிறுவனங்களில் சேரும் இந்தியர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தப்படி உள்ளது. சராசரியாக ஆண்டுக்கு குறைந்த பட்சம் 20 ஆயிரம் பேர் ஐ.டி. நிறுவனங்களில் சேர்கிறார்கள். அதிக சம்பளம் கிடைப்பதால் ஐ.டி. தொழில் நோக்கி செல்பவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்து வருகிறது.
 ஐ.டி. நிறுவனங்களில் ஐ.பி.எம். நிறுவனம் அதிக அளவில் ஊழியர்களை சேர்த்து வருகிறது. நடப் பாண்டில் மேலும் 10 லட்சம் சதுர அடிக்கு அலுவலகத்தை ஐ.பி.எம். அதிகரித்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் பெங்களூர், புனே, ஐதரா பாத் நகரங்களில் மேலும் 30 லட்சம் சதுர அடி பரப்பளவுக்கு அலுவலகங்களை விஸ்தரிக்க ஐ.பி.எம். திட்டமிட்டுள்ளது.
மாலைமலர்

0 comments:

கருத்துரையிடுக