செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010
82% இந்தியர்களுக்கு மாதம் ரூ. 2000 சம்பளம்!- அதிகரிக்கும் 'நடுத்தர வர்க்கம்'
இந்தியாவில் 82 சதவீத நடுத்தர வர்க்கத்தினர் மாதம் ரூ. 1000 முதல் ரூ. 2000 வரையே சம்பளம் வாங்குகின்றனர். அதேசமயம், ரூ. 10,000க்கு மேல் பெறுபவர்கள் பணக்காரர்கள் என்ற அந்தஸ்தினைப் பெறுகிறார்கள் என்று ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆய்வு தெரிவித்துள்ளது.
ஒரு படத்தில் வடிவேலு பெட்டிக் கடைக்குப் போய், ஒரு சிகரெட் கேட்பார். உடனே பக்கத்தில் வெட்டியாக நின்று கொண்டிருக்கும் ஒரு நபர், சிகரெட் வாங்குகிற அளவுக்கு வசதி வந்து விட்டதா என்று கேட்பார். இது படத்தில் வரும் காமெடி. ஆனால் ஆசிய வளர்ச்சி வங்கி அறிக்கையைப் பார்த்தால் இது நிஜம் போலவே தெரிகிறது.
ஆசிய வளர்ச்சி பாங்கி சார்பில், ஆசிய மக்களின் பொருளாதார நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த இடத்திற்கு விரைவில் ஆசிய நாடுகள் வேட்டு வைக்கவுள்ளன.
20 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 100 கோடி!:
இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 100 கோடி நடுத்தர வர்க்கத்தினர் இருப்பார்களாம்.
நடுத்தர வர்க்கத்தினர் என்பது பொதுவான சொல்லாக இருந்தாலும் அவர்களை மேல் நடுத்தர வர்க்கத்தினர், கீழ் மற்றும் மத்திய நடுத்தர வர்க்கத்தினர் என ரயிலில் பெர்த் பிரிப்பது போல பிரித்து வைத்துள்ளனர்.
இதில் மாதம் ரூ.1,035ல் இருந்து ரூ.2,070 வரை சம்பாதிப்பவர்களை கீழ் நடுத்தர வர்க்கத்தினர் என்றும், ரூ.2070ல் இருந்து ரூ.5,177 வரை சம்பாதிப்பவர்களை மத்திய நடுத்தர வர்க்கத்தினர் என்றும், ரூ.5177ல் இருந்து ரூ.10,354 வரை சம்பாதிப்பவர்களை மேல்நடுத்தர வர்க்கத்தினர் என்றும் அளவிட்டுள்ளனர்.
இதன்மூலம் மாதம் ரூ. 10,354க்கு மேல் சம்பாதிப்பவர்களை பணக்காரர்களாக்கியுள்ளது ஆசிய வளர்ச்சி வங்கி. இந்தியாவைப் பொறுத்தவரை 82 சதவீத நடுத்தர வர்க்கத்தினர் கீழ் நடுத்தர வர்க்கத்தினரே.
அதாவது இவர்களது மாதச் சம்பளம் அதிகபட்சம் ரூ. 2,070. இவர்களின் எண்ணிக்கை 22.40 கோடியாகும்.
மத்திய நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை 4.50 கோடி. மேல் நடுத்தர வர்க்கத்தினர் 50 லட்சம் பேர் உள்ளனர். பணக்காரர்களின் எண்ணிக்கை 10 லட்சம் பேராகும். மாதம் ரூ. 10,000க்கு மேல் சம்பளம் வாங்குவோரின் எண்ணிக்கை 0.0009 சதவீதம் மட்டுமே என்கிறது அந்த ஆய்வு.
செய்தி: தட்ஸ் தமிழ்
0 comments:
கருத்துரையிடுக