புதன், 18 ஆகஸ்ட், 2010
வெள்ள பாதிப்பு: பாக்.கிற்கு அமெரிக்கா மேலும் நிதியுதவி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு, நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமெரிக்கா மேலும் நிதியுதவி அளித்துள்ளது.
பாகிஸ்தானில் இதுவரை இல்லாத அளவிற்கு கொட்டி தீர்த்த மழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் சுமார் 20 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுனாமி மற்றும் ஹைட்டி நிலநடுக்கத்தைவிட இது மிக மோசமான இயற்கை சீற்றம் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கூறியுள்ளார்.
இந்நிலையில் நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மிக மந்தமான நிலையில் நடைபெற்றுவருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வெள்ள பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் உள்கட்டமைப்புகளை வேகமாக சீரமைக்க உதவும் விதமாக, பாகிஸ்தானுக்கு மேலும் நிவாரண உதவியை அளிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
0 comments:
கருத்துரையிடுக