செவ்வாய், 11 ஜனவரி, 2011
2013 முதல் துபாயில் பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட உள்ளன.
உலகம் முழுக்க 50 ஆயிரம் கோடி பிளாஸ்டிக் பை இருப்பதாக மதிப்பிட்டிருக்கிறார்கள். ஐக்கிய அரபு எமிரேட்சில் 2 ஆயிரம் கோடி. இந்த நிலையில், பிளாஸ்டிக் பைக்கு இன்னும் 2 ஆண்டில் ‘மங்களம் பாட’ ஐ.அ.எ. அரசு முடிவு செய்திருக்கிறது. சுற்றுச்சூழல் அமைப்புகளின் இந்த ஐடியாவுக்கு அரசு ஏக மனதாக ஓகே சொல்லியிருக்கிறது. திட்டமிட்டபடி இலக்கை அடைய ஒவ்வொருவரின் பங்களிப்பும் அவசியம் என்பதால் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்படுகின்றன.
இதுதொடர்பாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ரஷீத் அகமது பின் பகாத் கூறுகையில், “சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு உணர்ந்திருக்கிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் விதிகள் திருத்தப்பட உள்ளன. இவற்றை மதித்து நடப்பதாக பெட்ரோகெமிக்கல் கம்பெனிகளும் கூறியுள்ளன. மக்களின் முழு ஒத்துழைப்புடன் 2013&க்குள் பிளாஸ்டிக் பை இல்லாத நாடாக ஐ.அ.எ. உருவாகும்” என்றார்.
தென்மேற்கு ஆசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பெர்சியன் வளைகுடா அருகே உள்ளது. அபுதாபி, அஜ்மன், துபாய், புஜைரா, ரஸ்அல்கைமா, ஷார்ஜா, உம்அல்குவைன் ஆகிய 7 எமிரேட்கள் இதில் உள்ளன. 2013 முதல் 7 எமிரேட்களிலும் பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட உள்ளன.
0 comments:
கருத்துரையிடுக