வியாழன், 13 ஜனவரி, 2011

இந்தியக் கப்பல் கடத்தல்: கொள்ளையர்கள் அட்டகாசம்.

இந்தியாவைச் சேர்ந்த 14 மாலுமிகளுடன் சென்று கொண்டிருந்த இந்தியக் கப்பல் ஒன்றை, சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 9 ஆம் தேதியன்று ஓமன் கடலோரத்தில் உள்ள சலஹா என்னுமிடத்தில் இந்த கடத்தல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.  இந்திய கப்பல் கடத்தப்பட்ட இத்தகவலை இந்திய கப்பல் போக்குவரத்துத்துறை இயக்குநரகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் இன்று டெல்லியில் தெரிவித்தார். கடத்தல்காரர்களின் கோரிக்கை என்ன, பிணையத் தொகை ஏதும் கேட்டுள்ளார்களா என்பது குறித்த தகவல் இன்னமும் தெரியவரவில்லை.
ஏமன் கடற் பகுதியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கப்பல்கள் வரும்போது, அவற்றை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்று பணம் பறிப்பது அடிக்கடி நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக