திங்கள், 24 ஜனவரி, 2011
தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள் ஓட்டம்.
வாஷிங்டன், ஜன. 24- தஜிகிஸ்தானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பீதி அடைந்த மக்கள் ஓட்டம் பிடித்தனர். சோவியத் ரஷியாவில் இருந்து பிரிந்த தஜிகிஸ்தான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மலைப் பிரதேசத்தில் காராகுல் நகரம் உள்ளது. இது சீன எல்லையில் அமைந்துள்ளது. இங்கு இன்று காலை 7.45 மணி அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. பாத்திரங்கள் உருண்டோடின. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர். ரோடுகளில் தஞ்சம் புகுந்தனர். சிறிது நேரம் கழித்து வீடுகளுக்கு திரும்பினர்.
0 comments:
கருத்துரையிடுக