வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

சுடான் டார்ஃபூரில் யுத்தம் முடிந்தது: ஐ.நா

ஆறு ஆண்டுகள் நடைபெற்ற மோதல்களுக்கு பிறகு டார்ஃபூரில் இடம்பெற்ற போர் முடிவுக்கு வந்துவிட்டதாக, சுடானின் டார்ஃபூர் பகுதியில் இருக்கும் அமைதி காக்கும் படையின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிச் செல்லும் தளபதி கூறியுள்ளார்.

தற்போது அங்கு கொள்ளைக் கூட்டத்தினரின் நடமாட்டமே இருப்பதாக, ஐக்கிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றிய கூட்டுப் படைகளின் அப்பகுதிக்கான தலைமைப் பொறுப்பிலிருந்த தளபதி ஜெனரல் மார்டின் அக்வாய் அவர்கள், செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

2003 ஆம் ஆண்டில் டார்ஃபூர் பகுதியில் மோதல் தொடங்கியதை அடுத்து அங்கிருந்து இரண்டரை லட்சம் மக்கள் தமது வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்; மேலும் மூன்று லட்சம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அங்கு கிளர்ச்சியாளர்களையும் அரசாங்கத்தையும் மீண்டும் ஒரு அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

0 comments:

கருத்துரையிடுக