திங்கள், 10 ஆகஸ்ட், 2009
வக்ப் வாரியம் சார்பில் தமிழகத்தில் நான்கு மருத்துவமனைகள்: கவிக்கோ பேட்டி
சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நான்கு இடங்களில் வக்ப் வாரியம் சார்பில் மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்றும் ஒரு இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் நெல்லையில் வக்ப் வாரியத தலைவர் கவிக்கோ அப்துர் ரஹ்மான் பேட்டி அளித்தார். அதில் ஒரு மருத்துவமனை அப்பல்லோ மருத்துவமனை போன்று சகல வசதியுடன் கூடியதாக இருக்குமென்றும், வக்ப் வாரியத்திற்கு சொந்தமான இடங்களில் கல்வி நிலையங்கள், தொழிற்கூடங்கள், மருத்துவக்கல்லூரி அமைத்து இஸ்லாமியர்களின் கல்லாமை ஒழிக்கப்படும் என்றும் கூறினார். வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடங்களை மீட்டால் தமிழகத்தில் இஸ்லாமியர்களில் யாரும் ஏழைகள் இருக்க மாட்டர்கள் என்றும் தனது பேட்டியில் அவர் தெரிவித்தார்.
Labels:
அரசு,
தகவல்கள்,
வக்ஃபு வாரியம்
1 comments:
நல்ல திட்டங்கள் ! வரவேற்க படவேண்டியது
கருத்துரையிடுக