அரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 13 நவம்பர், 2009

தகவல் பெறும் தகவல் பெறும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005- வழிகாட்டி கையேடு

guidebook_rtiact

வியாழன், 29 அக்டோபர், 2009

குளச்சல் மீன்பிடிதுறைமுக பணி மீண்டும் நேற்று தொடங்கியது.


குளச்சலில் தமிழக அரசு சார்பில் மீன்பிடிதுறைமுகம் அமைக்க கடந்த 2008-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. முதல் கட்டமாக துறைமுகத்துக்கு மேற்கு பகுதியில் அன்னாங்கல் பாறை வரை கடலில் அலை தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. தொடர்ந்து கிழக்கு பகுதியில் அலை தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கிழக்கு தடுப்பு சுவரை 100 மீட்டர் தூரம் நீட்டிக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் துறைமுக பணி முடங்கியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழக சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் குளச்சல் மீன் பிடித்துறைமுக பணியை ஆய்வு செய்தனர். மீனவர் பிரதிநிதிகளிடம் ஆலோசனை நடத்தினர். அப்போது மீனவர்கள் கிழக்கு பகுதி தடுப்பு சுவரை 100 மீட்டர் நீடிக்க வேண்டும் என்றனர் இதற்கு சட்டமன்ற கணக்கு குழுவினர் 50 மீட்டர் நீட்டிக்க அரசுக்கு பரிந்துறைப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து நேற்று முதல் மீண்டும் அலைதடுப்பு சுவர் கட்ட கற்கள் போடும் பணி தொடங்கியது

செவ்வாய், 27 அக்டோபர், 2009

1200 அரசு பணியிடங்களுக்கு நவம்பரில் குரூப்1 தேர்வு

ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப்பணிகளுக்கு வரும் நவம்பரில் இருந்து அறிவிப்பு வெளியிட உள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தலைவர் காசிவிஸ்வநாதன் கூறினார். சேலம் அரசு கலைக்கல்லூரியில் போட்டித் தேர்வுகள் பற்றி விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட காசி விஸ்வ நாதன் நிருபர்களிடம் நேற்று கூறியது: 
அரசு கல்லூரிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வுகள் எழுதுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தொடர்ந்து ஓராண்டாக 12க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் போட்டித்தேர்வு குறித்து பேசி வருகிறேன். வரும் நவம்பர் மாதம் 1,200 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வுகள் நடக்க உள்ளது. இதில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் சார்பதிவாளர் உள்ளிட்ட பதவிகள் அடங்கும். வனத்துறை ரேஞ்சர் பணிக்கு 70 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணிக்கு பட்டம் படித்த அனைவரும் விண்ணப்பிக்கலாம். குரூப் 2 தேர்வுகளை எந்த பட்டப்படிப்பு முடித்திருந்தாலும் எழுத முடியும். 
பட்ட மேற்படிப்புகள் துறை சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்ள மட்டுமே பயன்படும். அரசு வேலைக்கு செல்ல வேண்டுமானால் கட்டாயமாக அரசு நடத்தும் போட்டித்தேர்வுகளை மாணவர்கள் எழுத வேண்டும். விடைத்தாள் வெளிப்படையாக திருத்தப்படுவதால் தங்கள் விடைத்தாள் குறித்தும் மாணவர்கள் அறிந்து கொள்ள வாய்ப்புள்ளது. அரசு வேலையில் பெண்களுக்கு 30 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காசிவிஸ்வநாதன் கூறினார்.

ஞாயிறு, 25 அக்டோபர், 2009

போலீஸ் நிலையங்கள் நவீனமாகின்றன டயல் செய்தால் எப்ஐஆர் பதிவாகும்

இனிமேல் புகாரை பதிவு செய்ய போலீஸ் நிலையத்தில் தவமிருந்து போலீசாரின் தயவுக்காக காத்திருக்கவேண்டியது இல்லை. ஒரே ஒரு தெலைபேசி அழைப்பு மூலம் எளிதாக எப்ஐஆர் பதிவு செய்து கொள்ள லாம். தொலை பேசி மூலம் தெரிவிக்கும் புகார்களை காவல்நிலையத்தில் இருக்கும் இயந்திரம் எப்ஐஆர் ஆக பதிவு செய்துவிடும். 
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தேர்தலின் போது சட்டம், காவல்துறை நவீனமாக்கப்பட்டு சீரமைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதல்கட்டமாக போலீஸ் நிலையங்கள் நவீனமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
இதன் ஒரு கட்டமாக காவல்நிலைய தொலைபேசியுடன் அதிநவீன எலக்ட்ரானிக் இயந்திரம் பொருத்தி அதன் மூலம் புகார்களை பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. தொலைபேசி மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் போது அதை இந்த இயந்திரம் எப்ஐஆர் ஆக பதிவு செய்து விடும். அதற்கான அச்சிடப்பட்ட நகலையும் தரும். இந்த நகல்களை மனுதாரர் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவருக்கு போலீசார் வழங்கினால் போதும். தற்போது காவல்நிலையத்தில் விசாரணைக் கைதிகளிடம் பெறப்படும் வாக்குமூலங்களை நீதிமன்றங்கள் ஏற்பதில்லை. இதை மாற்றுவதற்காக வீடியோ பதிவு முறையில் வாக்குமூலம் பெறும் முறையை நடைமுறைபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 
நேற்று டெல்லியில் நடந்த நீதித்துறை அரசு அதிகாரிகள் கூட்டத்தில் Ôவிஷன் டாகுமெண்ட்Õ என்ற பெயரில் இந்த நவீன இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

செவ்வாய், 20 அக்டோபர், 2009

இலங்கை சென்ற தமிழகக் குழு முஸ்லிம்களை உதாசீனம் செய்துவிட்டது : முஸ்லிம்கள் குற்றச்சாட்டு

அண்மையில் இலங்கைக்கு சென்ற தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்களை உதாசீனம் செய்துள்ளதாகத் தமிழக மற்றும் இலங்கை முஸ்லிம்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
20 வருடங்களுக்கு முன்னர் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் குறித்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அறிக்கையில் எதனையும் குறிப்பிடவில்லை என முஸ்லிம் சமாதான செயலக இணைய தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இதனை ஓர் இன ரீதியான ஒடுக்குமுறையாகவே நோக்க வேண்டும் என புத்தளம் இடம்பெயர் முகாமில் தங்கியிருக்கும் சிரேஷ்ட முஸ்லிம் பிரஜை ஒருவர் தெரிவித்துள்ளார்.
புத்தளம் இடம்பெயர் முகாமுக்கு விஜயம் செய்யுமாறு பல கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
முஸ்லிம் இடம்பெயர் மக்கள் தொடர்பில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை எனவும், இதன் மூலம் அவர்களின் பக்கச் சார்பான தன்மை புலப்படுவதாகவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
வன்னி இடைத்தங்கல் முகாம்களுக்கும், மலையகத்திற்கும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சி உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

வெள்ளி, 18 செப்டம்பர், 2009

காவல்நிலையங்கள் நெட்வோர்க் மூலம் இணைப்பு - ப. சிதம்பரம்


நாடு முழுவதும் உள்ள 16 ஆயிரம் காவல் நிலையங்களை ஒரே நெட்வொர்க்கின் கீழ் இணைப்பதற்கான 2 ஆயிரம் கோடி ரூபாயிலான திட்டம் வரும் 2011-12ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வரும் என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருக்கிறார். 

இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது, பயங்கரவாத சவால்களை முறியடிப்பது ஒரே குடையின் கீழ் (single network) கொண்டு வரப்படும் என்று புதுடெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் அமைச்சர் கூறினார்.

குற்றங்கள் மற்றும் குற்றங்களை கண்டறியும் நெட்வொர்க் மற்றும் முறைகளை உருவாக்குவதில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் கூறிய ப. சிதம்பரம், இந்த முறையில் 16 ஆயிரம் காவல்நிலையங்கள் கணினி மூலம் இணைக்கப்படும் என்றார்.

இவற்றில் எந்தவொரு காவல்நிலையமும், மற்ற காவல்நிலையங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

குரூப் 'பி' பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசின் 41 துறைகளில் 296 குரூப் 'பி' பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு துறையில் இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் உத்தேசித்துள்ளது.

துறைவாரியான பணிகளின் விவரங்கள், பிரிவு வாரியான காலியிடங்கள், விண்ணப்ப படிவம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம் மற்றும் இதர விவரங்கள், 22 - 28ஆகஸ்ட் 2009-ம் தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ்/ரோஜ்கார் சமாச்சார் ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ளது. 

அதோடு, 29 ஆகஸ்ட் - 04 செப்டம்பர் 2009, 5 - 12, செப்டம்பர் 2009 மற்றும் 13 - 20 செப்டம்பர் 2009 ஆகிய தேதிகளிட்ட எம்ப்ளாய்மென் நியூஸ் பிழை திருத்தத்திலும் இந்த விவரங்களைக் காணலாம். விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 22.09.09.
தேர்வாணையத்தின் இணையதளத்திலும் இதுபற்றிய விவரங்கள் இடம் பெற்றுள்ளதாக இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 8 செப்டம்பர், 2009

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு-தேர்வு ரத்து, விரும்பினால் எழுதலாம்

விரும்பினால் மட்டுமே சிபிஎஸ்இ 10ம் வகுப்புத் தேர்வை மாணவர்கள் எழுதும் முறை 2010-11 கல்வியாண்டில் அமலாக்கப்படும் என்று மத்திய மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.

இதன்மூலம் அடுத்த கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுகிறது.



புதன், 2 செப்டம்பர், 2009

ஹஜ் ஒதுக்கீடு விதிகளில் மாற்றம்

ஹஜ் புனித யாத்திரை செல்லும் பயணிகளுக்கான ஒதுக்கீடு நடைமுறைகளில் மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

ஹஜ் யாத்திரை செல்லும் பயணிகள் ஒதுக்கீட்டில் வெளிப்படையான நடைமுறையைக் கடைபிடிக்கும் நோக்கில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனங்களுக்கு (Tour Operators) ஹஜ் யாத்திரை முன் அனுபவம் இல்லாவிட்டாலும் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கும் ஹஜ் யாத்திரை ஒதுக்கீடு வழங்க மத்திய வெளியுறவு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

சுற்றுலா நிறுவனங்களுக்குரிய விதிமுறைகளின்படி பதிவு செய்யப்பட்டுள்ள தகுதியான நிறுவனங்களுக்கு சம வாய்ப்புகள் வழங்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்திருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் பல்வேறு நீதிமன்றங்களில் இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தலைமையில் புதுடெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில், ஹஜ் ஒதுக்கீட்டு விதிகளில் மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 1 செப்டம்பர், 2009

ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்க நுகர்வோர் ஹெல்ப் லைன்: அமைச்சர் எ.வ. வேலு


தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதனால் நுகர்வோர் எண்ணிக்கை ரேஷன் கடைகளில் அதிகரித்து வருகிறது. கூட்டம் காரணமாக விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. தாமதம் ஏற்படுவதால் பொருள்கள் தட்டுப்பாடு என கூற முடியாது.

ரேஷன் கடைகளில் உள்ள முறைகேடுகள் மற்றும் புகார் பற்றி நுகர்வோர் தகவல் தெரிவிக்க நுகர்வோர் ஹெல்ப் லைன் திட்டம் அடுத்த மாதம் முதல் தொடங்கப்படும் என்றார் அமைச்சர் வேலு.


பிளாஸ்டிக் ரோட்டிற்கு மத்திய அரசு அங்கீகாரம்

மதுரை தியாகராஜர் இன்ஜி., கல்லூரி வேதியியல் பேராசிரியர் வாசுதேவன்கண்டுபிடித்த பிளாஸ்டிக் ரோட்டிற்கு, மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மறு பயன்பாட்டிற்கு பயன்படாத பாலித்தீன் கவர்கள், பிஸ்கட், சாக்லேட்கவர்கள், தெர்மாகோல் போன்றவற்றை மீண்டும் பயன்படுத்தவும், பூமிவெப்பமடைவதை தடுக்கவும், மதுரை தியாகராஜர் இன்ஜி., கல்லூரி பேராசிரியர்வாசுதேவன் ஆராய்ச்சி மேற்கொண்டார். இவற்றை பயன்படுத்தி பிளாஸ்டிக்ரோடு அமைக்க முடிவு செய்தார். கழிவுகளை எரிக்காமல், தொழில் நுட்பத்தைப்பயன்படுத்தி ஜல்லிகளில் கலந்து பிளாஸ்டிக் கோட்டிங் கொடுத்து, அவற்றுடன்தார் சேர்த்து பிளாஸ்டிக் ரோடு அமைத்தார்.
பிளாஸ்டிக் ரோடு: உலகில் முதன்முறையாக இவரது கண்டுபிடிப்பானபிளாஸ்டிக் ரோடு, முதலில் கோவில்பட்டியில் 2002ல் போடப் பட்டது. கிராமவளர்ச்சித் துறை மூலம் தமிழகத்தில் 2000க்கும் அதிகமான கி.மீ., பிளாஸ்டிக்ரோடுகள் போடப்பட்டன. மும்பை, கேரளாவில் ரோடுகள் அமைக்கும் பணிநடக்கிறது.தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் இவரது ஆராய்ச்சிக்கு 50 ஆயிரம்ரூபாய் நிதி உதவி வழங்கி, பிளாஸ்டிக் ரோடு போடும் வழிமுறைகள் குறித்துஆய்வு செய்ய கேட்டது.

ஆய்வு அறிக்கையை வாசுதேவன் சமர்ப்பித்தார். அது புத்தகமாகவெளியிடப்பட்டது. பிளாஸ்டிக் ரோடுக்கு தியாக ராஜர் இன்ஜி., கல்லூரிக்குமத்திய அரசு காப்புரிமை 2006ல் வழங்கியது.நிதி உதவி: பிளாஸ்டிக் ரோட்டின்தன்மை, தரம், உழைப்பு, ஆயுள், பயன்கள் குறித்து ஆய்வு செய்ய, இரண்டாம்கட்டமாக 15 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. ஆய்வு அறிக்கைசமர்ப்பிக்கப்பட்டது. அறிக்கையை ஆய்வு செய்த மாசு கட்டுப்பாட்டு வாரியம்,பிளாஸ்டிக் தார் ரோடுகள் அமைப்பதால் ஏற்படும் நன்மைகள், சாதாரணரோட்டிற்கும், பிளாஸ்டிக் ரோட்டிற்கும் உள்ள வித்தியாசம், செலவுகள் விவரம்அடங்கிய குறிப்புகளை தற்போது புத்தகமாக வெளியிட்டுள்ளது.
இந்த புத்தகங்களை இந்தியா முழுவதிலுமுள்ள அனைத்து உள்ளாட்சிஅமைப்புகள் மற்றும் ரோடுகள் பராமரிப்புத் துறைகளுக்கும் அனுப்பியுள்ளது.அந்த புத்தகத்தில் தற்போது அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் ரோடுகள்தரமானதாகவும், நீடித்து உழைக்கக் கூடியது என்றும் குறிப்பிட்டுள்ளது.
அங்கீகாரம்: மத்திய கிராம வளர்ச்சி அமைச்ச கத்தின் தேசிய கிராமப்புறரோடுகள் வளர்ச்சி நிறுவனம், கிராமப்புறங்களில் பிளாஸ்டிக் தார் ரோடுகள்அமைக்க அங்கீகரித்து வழிமுறைகளை வகுத்துக் கொடுத்துள்ளது. அதற்கான"கைடு லைன்' வெளியிட்டுள்ளது. கிராமப்புறங்களில் பிளாஸ்டிக் தார் ரோடுகள்அமைக்க ஏற்பாடு செய்துள்ளது.

பேராசிரியர் வாசுதேவன் கூறியதாவது:மத்திய அரசு அளித்துள்ள கைடு லைன்மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பிளாஸ்டிக் தார் ரோடுகள் நீடித்து உழைக்கும்.சாதாரண தார் ரோட்டைக் காட்டிலும் ஐந்தாண்டுகள் கூடுதல் பலன் தரும்.மழைநீர் ஊடுருவி சாலைகள் பழுதடைவதில்லை. பராமரிப்பு செலவுகள்கிடையாது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் மிச்சமாகும்.
சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவது தடுக்கப்படும். தட்பவெட்பநிலையை சீராக்க உதவும். பிளாஸ்டிக் கழிவுகளால் இவ்வுலகிற்கு ஏற்படும் அபாயத்தை நீக்கலாம். எனது முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்த கல்லூரி நிர்வாகத்துக்கும், தொழில் நுட்பத்தில் உதவியவர்களுக்கும் நன்றி.

பிளாஸ்டிக் தார் ரோடு அமைக்க விரும்புவோர் 0452-2482240 என்றதொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு வாசுதேவன் கூறினார்.

குளப்புறம் முதல் "மைலோடு" வழியாக களியங்காடு வரை 4 வழி சாலை பணிகள் 6 மாதத்தில் தொடங்கும் ஹெலன்டேவிட்சன் எம்.பி. தகவல்

ஹெலன்டேவிட்சன் எம்.பி நிருபர்களிடம் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை அமைக்க பல்வேறு பாதைகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் குளப்புறம், மடிச்சல், பள்ளியாடி, நட்டாலம், மைலோடு வழியாக களியங்காடு வரையிலான பாதை இறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் எந்த மாற்றமும் இருக்காது.
இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுவிட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் பழுதான சாலைகள் சீரமைக்கும் பணிக்காகவும் நிதி ஒதுக்கப்பட்டுவிட்டது. இதனை தெரிந்து கொண்ட கம்யூனிஸ்டு கட்சியினர் வேண்டுமென்றே போராட் டம் நடத்தி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினா