வியாழன், 31 டிசம்பர், 2009

குமரி மாவட்டத்தில் இலவச வேட்டி, சேலை நாளை முதல் விநியோகம்


தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண் டிகையை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டும் பொங்க லுக்கு முன்னரே வழங்கி முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. குமரி மாவட் டத்தில் 4 தாலுகாக்களுக் கும் சேர்த்து 4 லட்சத்து 43 ஆயிரத்து 503 வேட்டிகளும், 4 லட்சத்து 45 ஆயிரத்து 97 சேலைகளும் என்று மொத்தம் 8 லட் சத்து 88 ஆயிரத்து 600 வேட்டி சேலைகள் பொங் கல் பண்டிகையை முன் னிட்டு வழங்கப்பட உள்ளன
இது தொடர்பாக கலெக்டர் ராஜேந்திர ரத்னூ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்டத்தில் 2010ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு 1.1.2010 முதல் 10.1.2010 வரை மாவட்டத்தில் உள்ள 81 வருவாய் கிராமங்களிலும் இலவச வேட்டி சேலைகள் விநியோகம் செய்யப்படுகிறது. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் இலவச வேட்டி சேலை பெற தகுதியுடையவர்கள். இலவச வேட்டி வழங் கும் வருவாய் கிராம அலுவலகத்தில் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் விபரங்கள் குறித்து தகவல் பலகையில் பொதுமக்கள் பார்வைக்கு விளம்பரப்படுத்தப்பட உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த இலவச வேட்டி சேலை வழங்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக