வெள்ளி, 1 ஜனவரி, 2010
வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கவர குவைத்தில் புதிய சட்டம் (ஹஜ் செல்வோருக்கு சம்பளத்துடன் கூடிய 21 நாள் விடுமுறை)
வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நலன்களைப் பேணும் விதகமாக குவைத் பாராளுமன்றம் புதிய சட்டமொன்றை இயற்றியது. 45 வருடம் பழைமைவாய்ந்த சட்டத்தைத் திருத்திப் புதிய சட்டமொன்றை பாராளுமன்றம் இயற்றியது. இதனால் குவைத்திலுள்ள 23 இலட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நன்மையடையவுள்ளனர்.
தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு, விடுமுறை, தகுதிக்கேற்ப வேலை, கடுமையான உழைப்பைக் குறைத்தல், தங்குமிட வசதிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தொழிலாளர்கள் நன்மை யடையும் விதத்தில் இப்புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
போலி தொழில் முகவர்கள் உட்பட ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவோரைக் கடுமையான முறையில் தண்டிக்கவும், சிறைக்கனுப்பவும் இப்புதிய சட்டம் அனுமதியளிக்கின்றது. குவைத்தில் பதினொரு இலட்சம் பேருள்ளனர். வெளி நாட்டுத் தொழிலாளர்கள் 23 இலட்சம் பேருள்ளனர். இவர்களில் அறைவாசிப் பேர் ஆசிய நாடுகளைச் சேர்ந்தோர்களாவர்.
புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக பாராளுமன்றத்தில் இடம் பெற்ற விவாதத்தில் பழைய சட்டங்கள் தொழிலாளர்களை அடக்கு முறைக்குள்ளாக்குவதாக எம். பிக்கள் விமர்சித்தனர். வெளிநாடுகளிலிருந்து தொழிலாளர்களை வரவழைக்கும் குவைத் நிறுவனங்கள் இது தொடர்பாக குவைத் அரசாங்கத்தின் அனுமதியைப் பெறவேண்டு மென்றும் புதிய சட்டம் கூறுகின்றது.
0 comments:
கருத்துரையிடுக