வெள்ளி, 15 ஜனவரி, 2010
பிளஸ் 2 மாதிரி பொதுத் தேர்வு அட்டவணையில் குழப்பம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளஸ் 2 மாதிரி பொதுத்தேர்வு அட்டவணையிலுள்ள குழப்பத்தைப் போக்க முதன்மைக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
நாகர்கோவிலில் நடைபெற்ற அக் கழக செயற்குழுக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
பிளஸ் 2 மாதிரி பொதுத்தேர்வு அட்டவணை, அரசுப் பொதுத்தேர்வு அட்டவணைப்படி அமையாமல் பாடங்களை மாற்றி மாணவர்களைக் குழப்பும் நிலையில் உள்ளது. இதுகுறித்து பலமுறை மாவட்டத் தேர்வுகள் அமைப்பாளரிடம் எடுத்துக்கூறியும் பலனின்றி, இம் முறையும் குழப்பும் நிலையே தொடர்கிறது. இதனால் தேர்ச்சி விகிதம் குறைய வாய்ப்புள்ளது. எனவே முதன்மைக் கல்வி அலுவலர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதிரி பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு பிளை லீப் பொருத்தப்பட்டுள்ள விடைத்தாள்களை வழங்க வேண்டும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் பாக்யசீலன் தலைமை வகித்தார். செயலர் பெருமாள், பொருளாளர் முருகன், துணைத் தலைவர்கள் சுந்தரம், சுந்தர்ராஜ், இணைச் செயலர்கள் ஜெயராஜ், செல்வக்குமார், ஜஸ்டின் ராஜ் பங்
0 comments:
கருத்துரையிடுக