சனி, 16 ஜனவரி, 2010

60 குழந்தைகளுக்கு தந்தையான யூத சாமியார் ராட்ச(ச)ன் கைது


இஸ்ரேலில் 17க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு வைத்திருந்து குறைந்தது 60 குழந்தைகளுக்கு தந்தையான சாமியாரை போலீசார் கைது செய்தனர். டெல் அவிவைச் சேர்ந்த சாமியார் கோயல் ராட்சன் (59). இவர் ஹடிக்வா என்ற புறநகர் பகுதியின் இரண்டு வீடுகளில் தங்கியிருந்து தன்னைத் தானே ஆன்மீக குருவாக அறிவித்துக் கொண்டார். அவரிடம் ஏராளமானோர் உபதேசம் பெறத் தொடங்கினர்.
இந்நிலையில், 2 இடங்களிலும் பல பெண்களை அடிமையாக அவர் அடைத்து வைத்திருந்ததாக தெரிகிறது. அதில் ஒரு பெண் தப்பித்து வெளியேறினார். அவர் கொடுத்த தகவலின் பேரில் கடந்த 6 மாதங்கள் முன் போலீஸ் விசாரணை தொடங்கியது. கோயல் ராட்சன் பற்றிய உண்மைகளை வெளிக் கொண்டு வர போலீசுக்கு தகவல் கொடுப்பவராக அந்தப் பெண் உளவாளியாக செயல்பட்டார்.
அதன்படி நடந்த ரகசிய விசாரணைகளில், மொத்தம் 17 பெண்களை பல ஆண்டுகளாக ராட்சன் அடிமைப்படுத்தி வைத்திருந்தது தெரிய வந்தது. அவர்களுக்கு ராட்சன் மூலம் 60 குழந்தைகள் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. அவன் அடிமைப்படுத்தி பாலியல் தொடர்பு கொண்ட பெண்களில் அவனுடைய சொந்த மகளும் அடக்கம். கோயல் ராட்சனை இஸ்ரேல் போலீசார் கைது செய்தனர். பெண்களை அடிமைப்படுத்தியது, பாலியல் பலாத்கார வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

0 comments:

கருத்துரையிடுக