சனி, 16 ஜனவரி, 2010
விளையாட்டு பொருட்களால் குழந்தைகளுக்கு ஆபத்து
விளையாட்டு துப்பாக்கி போன்ற பொருட்களை வைத்து விளையாடுவதால் குழந்தைகளின் மனதில் சிறு வயதிலேயே வன்முறை தலைதூக்கி விடுகிறது என்று இதுவரை சமுக ஆர்வலர்கள் கூறி வந்தனர். மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும் பாதிப்பு அல்லாமல் இப்போது குழந்தைகளை உடலாலும் பாதிக்க கூடிய விளையாட்டு பொருட்கள் சந்தையில் உலவ தொடங்கியுள்ளன.
பிளாஸ்டிக்கை மென்மையாக்க உதவும் ப்தாலேட்ஸ் எனப்படும் நச்சு இரசாயனம் விளையாட்டு சாமான்கள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. இதற்கு இந்தியாவில் எவ்வித ஒழுங்கு விதியும் இல்லை என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் கூறியுள்ளது. இந்தியாவில் விற்கப்படும் பலவித விளையாட்டுப் பொருட்களையும் ஆராய்ந்த இந்தக் குழு, அவற்றில் அதிக அளவில் தாலேட்ஸ் இரசாயனம் இருப்பதாக கண்டுபிடித்துள்ளது.
பாதியளவிலான விளையாட்டுப் பொருட்களில், சர்வதேச ரீதியில் அனுமதிக்கப்பட்ட அளவுகளை விட 45 சதவீதம் அதிகமாக தாலேட்ஸ் கலக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பெரும்பாலான விளையாட்டுப்பொருட்களில் ஆபத்து இல்லை என்று எழுதியுள்ளது பொய் என்றும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் தெரிவித்துள்ளது.
சின்ன்ஞ்சிறு குழந்தைகள் இதை வாயில் வைப்பதோ, அல்லது கடிக்கவோ செய்தால் அதன் நச்சுபொருட்கள் உடலில் ஊடுறுவ வாய்ப்புள்ளது. மேலும் இந்த பொருட்களை கையில் அதிக நேரம் வைத்து விளையாடிய பிறகு சுத்தம் செய்யாத கையில் உணவு பொருட்களை உட்கொள்ள நேரிடலாம். இதனால் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும்.
ஐரோப்பியன் யூனியன் மற்றும் அமெரிக்காவும் பல வருடங்களுக்கு முன்பே குழந்தைகளுக்கான விளையாட்டுப்பொருட்களில் தாலேட்சின் அளவு 0.1 சதவீதத்திற்கு அதிகமாகக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. இந்த ஆய்வின்போது சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் சீனாவிலிருந்து இறக்குமதிச்செய்யப்படும் 57சதவீதவிளையாட்டுப்பொருட்களிலும், தைவானிலிருந்து இறக்குமதிச்செய்யப்படும் 100 சதவீத விளையாட்டுப்பொருட்களிலும் நச்சுப்பொருட்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.2009 ஆம் ஆண்டு ஜனவரியில் சீனாவிலிருந்து விளையாட்டுப்பொருட்கள் இறக்குமதிச்செய்வது தடைச்செய்யப்பட்டிருந்தது.பின்ன W.T.O வில் இப்பிரச்சனையைக்கொண்டுச்செல்லப்போவதாக சீனா மிரட்டியதனால் தடை நீக்கப்பட்டது.இத்தகைய நச்சுப்பொருட்கள் நிறைந்த விளையாட்டுப்பொருட்கள் அது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதிச்செய்யப்பட்டாலும், உள்நாடுகளில் தயாரிக்கப்பட்டாலும் தடைச்செய்யப்படவேண்டும் அல்லது கட்டுப்படுத்தவேண்டும் என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் சிபாரிசு செய்துள்ளது.
0 comments:
கருத்துரையிடுக