- பாதிக்கப்பட்டவர் அரசு தரப்புக்கு உதவவும் மேல் முறையீடு செய்யவும் ஒரு வழக்கறிஞரை நியமித்து கொள்ள அனுமதிக்கப்படுவார்.
- சட்டப் பிரிவு 376, 376 ஏ முதல் 376 டி வரையிலான குற்றங்கள் பெண் நீதிபதியை கொண்ட நீதிமன்றத்தால் விசாரிக்கப்படும்.
- ஒரு பெண் கைது செய்யப்படும் பட்சத்தில் இந்த நடைமுறை கைவிடப்படும்
- கைது செய்யப்பட்டவுடன் அந்த நபர் மருத்துவரால் உடனடியாக பரிசோதிக்கப்பட வேண்டும்.
- பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவரிடம் அவரது வீட்டில், இயன்ற வரையில் ஒரு பெண் காவல் துறை அதிகாரி, பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது சமூக சேவகரின் முன்னிலையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டும்.
- இந்த வாக்குமூலங்கள் மின்னணு முறையில் ஒலி-ஒளி பதிவு செய்யப்பட வேண்டும்.
- சட்டப் பிரிவு 161-ன் கீழ் சாட்சிகளின் வாக்குமூலங்கள் வழக்கு ஆவணத்தில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும்.
- சட்டப் பிரிவு 376 முதல் 376 டி-ன் கீழ் வரும் குற்றங்கள் தொடர்பான விசாரணை கூடுமான வரையில் இரண்டு மாத காலங்களுக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.
- மனவளர்ச்சி குன்றியவருக்கு எதிரான வழக்கில் உரிய பாதுகாப்பு முறைகள் கையாளப்பட வேண்டும்.
- குற்ற நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர் அல்லது அவரை சார்ந்திருப்பவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக மாநில அரசு புதிய திட்டமொன்றை உருவாக்கும் வகையில் 357 ஏ என்ற புதிய பிரிவு சேர்க்கப்படுகிறது.
சட்ட ஆணையம் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த அறிக்கை மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. இது கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது சமர்ப்பிக்க இயலாததால் பட்ஜெட் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்பட்டு திருத்தங்கள் செய்யப்படும். எனவே தற்போது அவை இந்த அறிவிக்கையில் இடம் பெறவில்லை.
0 comments:
கருத்துரையிடுக