புதன், 6 ஜனவரி, 2010
இரு சிம் கார்டு கைத்தொலைபேசி - நோகியா அறிமுகம்
இரு சிம் கார்டு கைத்தொலைபேசியை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக நோகியா இந்தியா தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் கைத்தொலைபேசி சந்தாதரர்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் நோகியாவின் தொலைபேசி வடிவம் அமையும் என நோகியா இந்தியாவின் தலைமை நிர்வாகி விரல் ஒஜா தெரிவித்தார்.
இன்று கல்கத்தாவில் நோகியாவின் புதிய மாடல்களை அறிமுகம் செய்து தொடங்கி வைத்த திரு ஒஜா, இரு சிம் கார்டு தொலைபேசிக்கு இந்தியாவில் அதிக தேவை இருப்பதாகவும், இந்தியர்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் அதன் சிறப்புகள் அமையும் என தெரிவித்தார்.
0 comments:
கருத்துரையிடுக