புதன், 6 ஜனவரி, 2010
உலகின் ஆக பெரிய கட்டிடம் பர்ஜ் துபாய், பர்ஜ் கலீபா என பெயர் மாற்றம்
உலகின் ஆகப் பெரிய கட்டிடமான பர்ஜ் துபாய் என்ற பெயர் பர்ஜ் கலீபா என பெயர் மாற்றம் செய்யப்பட்ட்டுள்ளது. நேற்று விமரிசையான கொண்டாட்டத்திற்கிடையே திறக்கப்பட்ட இக்கட்டிடம் சுமார் 828 மீட்டர் உயரம் கொண்டது. இக்கட்டிடம் கட்ட ஆரம்பிக்கபட்டது முதல் பர்ஜ் துபாய் என்றே விளம்பரபடுத்தப்பட்டது. ஆனால் எதிர்பாரதவிதமாக அபுதாபி மன்னரின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
துபாய் கடனில் தத்தளித்தப்போது அபுதாபி மன்னரும், ஐக்கிய அமீரகத்தின் ஜனாதிபதியுமான சேக் கலீபா சுமார் 25 பில்லியன் டாலர் கடன் கொடுத்து இருக்கிறார். அதற்கு நன்றி தெரிவிக்கும் முகமாக அவர் பெயர் சூட்டப்பட்டிருப்பதாக துபாய் அரசு நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.160 மாடிகள் கொண்ட இக்கட்டிட திறப்பு விழாவுக்கு உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்கள் வருகை தந்திருந்தன. துபாய் பொருளாதார நெருக்கடிக்கு பின் திறக்கப்படுவதால் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.
பர்ஜ் துபாய் சில மாதங்களுக்கு முன்னமேயே கட்டப்பட்டு விட்டாலும் துபாயின் மன்னராக ஷேக் மக்தூம் பதவியேற்ற நான்காம் ஆண்டு தினமான இன்று அதன் திறப்பு விழா அமையுமாறு பார்த்து கொள்ளப்பட்டது. 124 வது மாடியில் இருந்து பார்வையிட்ட இக்கட்டிட உரிமையாளரான ஈமார் ப்ராப்பர்டீஸ் சேர்மன் முஹமது அலி அல் அப்பார் ”எதுவும் இவ்வுலகில் சாத்தியம் என்பதற்கு பர்ஜ் துபாய் ஓர் உதாரணம்” என்றார்.ஜனவரி 2004-லிருந்து இதற்கான பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.
திறப்பு விழாவுக்கு முன்னமேயே 260 மீட்டர் உயரத்தில் மிக உயரமான நீச்சல் குளம் உள்ளிட்ட 10 சாதனைகளை இக்கட்டிடம் ஏற்படுத்தியுள்ளது. 508 மீட்டர் உயரமான தைவானில் உள்ள தற்போதைய உயரமான கட்டிடத்தை விட உயரமானது. ஆனால் இதன் உயரம் குறித்து கேட்கப்பட்ட போது 800 மீட்டர்களுக்கு மேல் அதிகம் என்றே பதில் அளித்தனர் அதிகாரிகள்.
0 comments:
கருத்துரையிடுக