வியாழன், 27 மே, 2010
மூன்றே நாட்களில் பாஸ்போர்ட்
மூன்றே நாட்களில்
பாஸ்போர்ட் கிடைப்பதை உறுதி செய்ய நாடு முழுவதும் 77 பாஸ்போர்ட்
சேவை மையங்களை மத்திய அரசு அமைக்க உள்ளது. இதன்படி விண்ணபித்த ஒரே
நாளில் தக்கல் முறையில் பாஸ்போர்ட் பெற முடியும்.
சோதனை அடிப்படையில் செயல்பட
இருக்கும் முதல் சேவை மையத்தை நாளை பெங்களூருவில் அயலுறவுத்துறை
அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தொடங்கி வைக்கிறார்.
இதைத் தொடர்ந்து ஜூலைக்குள்
சென்னை, மும்பை, கொல்கத்தா உள்பட மேலும் 6 இடங்களில் சேவை மையம்
தொடங்கப்பட உள்ளன. இந்த பாஸ்போர்ட் சேவை மையங்களில்
விண்ணப்பதாரரின் விவரங்கள் பதிவு செய்யப்படுவதோடு, புகைப்படம்
எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்ட
உடனேயே மாவட்ட காவல்நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் 45
நாட்கள் காத்திருப்பதற்கு பதிலாக காவல்துறையினரின் ஆய்வறிக்கை
கிடைத்த மூன்றே நாளில் பாஸ்போர்ட் வீடு தேடி வந்து
விடும். நாடு முழுவதும் அமைக்கப்படும் 77 சேவை
மையங்கள் தவிர்த்து டெல்லி, சென்னை, மும்பையில் தலா 3 மையங்கள்
அமைக்கப்பட உள்ளது.

0 comments:
கருத்துரையிடுக