ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010
மதானியை கைது செய்த போலீசாருக்கு சம்மன்
பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 31வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானியை, கேரளாவில் உள்ள அன்வார்சேரியில் கர்நாடக போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து பெங்களூர் கொண்டு சென்றனர்.
கொல்லம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மதானியின் சகோதரர் அப்துல் சலாம் நேற்று முன்தினம் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், ‘வாரன்ட் மூலம் கைது செய்யப்படும் ஒருவரை 30 கி.மீ. தூரத்துக்கு அப்பால் அழைத்து செல்ல வேண்டும் என்றால் அருகில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அனுமதி பெற வேண்டும். கிரிமினல் சட்டம் 81வது பிரிவில் கூறப்பட்டுள்ள இந்த விதிமுறையை கர்நாடக போலீசார் மீறி விட்டனர்.
0 comments:
கருத்துரையிடுக