திங்கள், 23 ஆகஸ்ட், 2010
ஹஜ்: இந்தியாவிலிருந்து 10000 பேர் கூடுதல் அனுமதி
இந்தியாவிலிருந்து ஹஜ்ஜிற்கு 10000 பேர்க்கு கூடுதல் அனுமதி வழங்க சவூதி அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவிலிருந்து ஹஜ் கமிட்டி வழியாக ஹஜ்ஜுக்கு செல்வோரின் எண்ணிக்கை 125000 மாக உயர்ந்துள்ளது. இந்த வருடம் 25000 பேர்க்கு கூடுதல் அனுமதி வழங்க இந்தியா அரசாங்கம் சவுதி அரசை கேட்டிருந்தது. இதனை தொடர்ந்து சவூதி அரசாங்கம் 10000 பேர்க்கு கூடுதல் அனுமதி வழங்க தீர்மானித்தது. ஹஜ் யாத்திரை செல்ல இதுவரை 1,04,000 பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். புதிதாக அனுமதிக்கப்பட்ட 10000 இருக்கைகளும், மற்றும் உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட MP-க்கள், அமைச்சர்கள் பரிந்துரை மூலம் கொடுக்கப்பட இருந்த 6000 இருக்கைகளும் மாநில அரசுகளுக்கு பகிர்ந்து அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திலிருந்து ஹஜ்ஜிற்கு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
0 comments:
கருத்துரையிடுக