செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

திருவனந்தபுரம்- கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் ஹெலன்டேவிட்சன் எம்பி பாராளுமன்றத்தில் வலியுறுத்தல்

பாராளுமன்றத்தில் ரயில்வே துணை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் ஹெலன்டேவிட்சன் எம்பி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவின் தென்பகுதியில் அமைந்துள்ள கன்னியாகுமரி, நாட்டின் மிக முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்தும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆண்டு தோறும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணி கள் கன்னியாகுமரிக்கு வந்து செல்கிறார்கள். எனது தொகுதிக்குட்பட்ட ரயில் நிலையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் ரயில் பயணிகள் அவதி படுகின்றனர். 

 குறிப்பாக திருவனந்தபுரம்&கன்னியாகுமரி, மதுரை&கன்னியாகுமரி வழித்தடம் இரட்டை ரயில் பாதையாக மாற்றப்படாமல் இருக்கிறது. திருவனந்தபுரம்&கன்னியாகுமரி இடையேயான ரயில்வே பாதையை இரட்டை வழிப்பாதையாக மாற்ற வேண்டியதற்கான சர்வே எடுக்கப்பட்டு நான் பொறுப்பேற்ற பின்பு அதற்கான அறிக்கை கடந்த 31.7.2009 அன்று ரயில்வே போர்டுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. எனவே ரயில்வே துறை மந்திரி இக்கோரிக்கையை பரிசீலனை செய்து இந்த திட்டப்பணிகளை உடனடியாக நிறைவேற்ற வேண் டும். மதுரை&நாகர்கோவில் மற்றும் வாஞ்சிமணியாச்சி&தூத்துக்குடி இடை யேயான ரயில் பாதையை இரட்டை ரயில் பாதை ஆக்குவதற்கு எந்த திட்டமும் வகுக்காமல் இருப்பது தென்தமிழக மக்களுக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது. 
எனவே மத்திய ரயில்வே மந்திரி மதுரை&நாகர்கோவில் இடையேயான ரயில் பாதையை இரட்டை ரயில் பாதையாக மாற்றுவதற்கு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்மயமாக்கப்பட்ட இரட்டை ரயில் பாதைப்பணிகளை செங்கல்பட்டு முதல் திண்டுக்கல் வரையிலும், மதுரையில் இருந்து நாகர்கோவில் வரையிலும், வாஞ்சி மணி யாச்சி முதல் தூத்துக்குடி வரையிலுமான பாதைகளில் செயல்படுத்தினால் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு ஏதுவாக இருக்கும். மேலும் திருவண்ணா மலை&காட்பாடி&விழுப்புரம் வரையுள்ள மீட்டர்கேஜ் ரயில்வே பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற வேண்டும். காரை க்குடி&ராமநாதபுரம்&தூத்துக்குடி& திருச்செந்தூர்&கன்னியாகுமரி ஆகிய முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அதுபோல் மது ரை&எர்ணாகுளம் மற்றும் திண்டுக்கல்&சபரிமலை பகுதிகளை இணைக்க புதிய அகல ரயில் பாதைகளை அமைக்க வேண்டும்.
 2010&2011 ரயில்வே பட்ஜெட்டில் வாராந்திர ரயிலாக அறிவித்த பெங்க ளூர்&நாகர்கோவில் ரயிலை தினசரி அல்லது வாரம் மும்முறையேனும் இயக்க வேண்டும். கோவை&நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலை திருவனந்தபுரம் வரை நீட்டிக்க வேண்டும். அதேபோல் மங்களூர்&திருவனந்தபுரம் மாவேலி எக்ஸ்பிரஸ் ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும். நாகர்கோவில் டவுன், கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ரயில் நிலையங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த போதுமான நிதியை மத்திய ரயில்வே அமைச்சகம் ஒதுக்க வேண்டும்.
செய்தி: தினகரன்

0 comments:

கருத்துரையிடுக