செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

ரேஷன் கடைகள் மூலம் சி.எப்.எல்., பல்புகள்: குண்டு பல்புகளை ஒழிக்க அரசு பரிசீலனை

மின்சாரத்தைச் சேமிக்கவும், புவி வெப்பமடைதலை தவிர்க்கவும் அனைத்து வீடுகளுக்கும் ரேஷன் கடை வாயிலாக மானிய விலையில் சி.எப்.எல்., பல்புகள் வழங்க, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. உலக வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம், அனைத்து நாடுகளிலும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதுகுறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27ம் தேதி தேவையற்ற மின் விளக்குகள், மின் சாதனங்கள் என ஒரு மணி நேரம் நிறுத்தப்படுகிறது.தமிழகத்தில் மின் வாரியம் உட்பட அரசு அலுவலகத்தில் அதிக மின்சாரத்தில் ஒளி தரும் குண்டு பல்புகள் (ஜி.எல்.எஸ்.,) பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது.
இந்த வகை பல்புகளில் வெப்பம் அதிகளவில் இருப்பதால், கோழிப் பண்ணைகளில் முட்டைகள் குஞ்சு பொரிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். அதேபோல் சோடியம் மின் விளக்குகள் அதிக மின்சாரத்தில் ஒளி தருவதால், மாற்றுத்திறன் கொண்ட பல்புகளை அரசு மாற்றி வருகிறது.மின்சாரத்தைச் சேமிக்கவும் மாற்றுத்திறன் கொண்ட சிறு குழல் (சி.எப்.எல்.,) பல்புகளை, ரேஷன் கடைகளில் மானிய விலையில் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, ரேஷன் கார்டுக்கு 30 ரூபாய்க்கு தலா இரண்டு சி.எப்.எல்., பல்புகள் வழங்கவுள்ளது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்தில் மாநில உளவுத்துறை போலீசார், தமிழகம் முழுவதும் சி.எப்.எல்., பல்புகள் பயன்பாடு, மக்களிடம் வரவேற்பு குறித்து ரகசியமாக சர்வே எடுத்து அரசுக்கு அளித்துள்ளனர்.
 அதை தொடர்ந்து, ரேஷன் கடைகளில் மானிய விலையில் சி.எப்.எல்., பல்புகளை வழங்கிட அரசு, ஆயத்தப் பணிகள் மேற்கொண்டு வருகிறது.மின் நுகர்வை தவிர்ப்பதற்காகவும், அதிக மின்சக்தியை சேமிக்கவும் அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசுக்கு சொந்தமான உதவி பெறும் கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு குண்டு பல்புகளை பயன்படுத்த தடை விதித்து, அரசு ஆணை வெளியிட்டுள்ளது.சி.எப்.எல்., பல்புகள் விற்பனைக்கு வரவுள்ளதால், அரசு அலுவலகத்தில் குண்டு பல்புகளைத் தவிர்த்து, 14 வாட்ஸ் கொண்ட சி.எப்.எல்., பல்புகளை பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்தி: தினகரன்

0 comments:

கருத்துரையிடுக