ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

வெடிகுண்டு பீதி: ஏர் இந்தியா விமானம் ஓமனில் அவசர தரையிறக்கம்

வெடிகுண்டு பீதி காரணமாக குவைத்திலிருந்து மும்பை வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா போயிங் 737 ரக விமானம், மஸ்கட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 160 பயணிகளுடன் அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், விமானத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர், விமான சிப்பந்தியிடம் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்தார். உடனே அந்த சிப்பந்தி இது குறித்து விமானியிடம் தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அந்த விமானம் அவசரமாக மஸ்கட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அங்கு அந்த விமானத்தில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டதில், வெடிகுண்டு எதுவும் இல்லாததும், வெறும் புரளியே என்பதும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து அந்த விமானம் மீண்டும் மும்பைக்கு புறப்பட்டுச் சென்றது. இதனிடையே விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறிய அந்த பயணி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டாரா அல்லது விடுவிக்கப்பட்டாரா என்பது குறித்த தகவல் ஏதும் இல்லை.
வெப்துனியா

0 comments:

கருத்துரையிடுக