ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

போபால் விஷ வாயு ‌நிக‌ழ்வு முடிந்து போன வழக்கு: அமெரிக்கா

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் 1984ஆம் ஆண்டு நிகழ்ந்த விஷவாயுக் கசிவு ‌நிக‌ழ்வு முடிந்து போன வழக்கு என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க அயலுயுறவு செய்தித் தொடர்பாளர் பி.ஜே. குரோலி இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறுகையில், அமெரிக்காவைப் பொறுத்தமட்டில் இது முடிந்து போன வழக்கு என்று கூறினார். போபால் நச்சு வாயுக் கசிவு தொடர்பாக இந்திய அரசுடன் பேசியதாகவும், பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சோகமான சம்பவத்துக்காக வருத்தம் தெரிவித்ததாகவும் குரோலி கூறினார்.
இதனிடையே திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் மைக் ஃபுரோமெனுக்கு எழுதிய இணையதள கடிதத்தில் விஷவாயு சம்பவம் குறித்து கருத்து பரிமாறியதாகக் கூறப்படுவதை தெளிவுபடுத்த குரோலி விரும்பவில்லை. சர்வதேச அளவில் பரிமாறிக் கொள்ளப்படும் இணையதள விவரங்களை பொதுவாக வெளியிடுவதில்லை என்றும் அவர் கூறினார். இருப்பினும் இருவரும் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் வேறு விவகாரம் குறித்ததாகும் என்றும் குரோலி கூறினார்.
--வெப்துனியா

0 comments:

கருத்துரையிடுக