ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010
போபால் விஷ வாயு நிகழ்வு முடிந்து போன வழக்கு: அமெரிக்கா
மத்திய பிரதேச தலைநகர் போபாலில் 1984ஆம் ஆண்டு நிகழ்ந்த விஷவாயுக் கசிவு நிகழ்வு முடிந்து போன வழக்கு என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க அயலுயுறவு செய்தித் தொடர்பாளர் பி.ஜே. குரோலி இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறுகையில், அமெரிக்காவைப் பொறுத்தமட்டில் இது முடிந்து போன வழக்கு என்று கூறினார்.
போபால் நச்சு வாயுக் கசிவு தொடர்பாக இந்திய அரசுடன் பேசியதாகவும், பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சோகமான சம்பவத்துக்காக வருத்தம் தெரிவித்ததாகவும் குரோலி கூறினார்.
--வெப்துனியா
0 comments:
கருத்துரையிடுக