வெள்ளி, 3 செப்டம்பர், 2010

நோயுற்றவர்களுக்கு உதவுங்கள்.....

இன்ஸானிய அறக்கட்டளையால் நடத்தி வரும் Ash- Shifa சாதி மத பாகுபாடின்றி ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவி வழங்கி வருகின்றது. இதுவரை 107-பேர் மருத்துவ உதவிக்காக பதிவு செய்துள்ளனர். அதில் 48- பேருக்கு இனியும் மருத்துவ உதவி வழங்க வேண்டியுள்ளது. இதற்கு முன் இந்த அறக்கட்டளையால் கேன்சர் மற்றும் சிறுநீரக நோய்களுக்கு மருத்துவ உதவி பெற்றவர்கள் தொடர்ந்து வாழ மேலும் உதவ கேட்டுள்ளனர். பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை மனதில் வைத்து இந்த அறக்கட்டளைக்கு உதவவும் பிறரிடம் உதவி செய்ய கேட்டுக்கொள்ளவும்  அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
"எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்"(திருக்குர்ஆன் 5:32)
"எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு"(திருக்குர்ஆன் 4:85)

0 comments:

கருத்துரையிடுக