வெள்ளி, 21 ஜனவரி, 2011
முதல் மாராடு கொலைவழக்கு: 3 பேருக்கு ஆயுள்தண்டனை.
கோழிக்கோடு,ஜன.21:முதல் மாராடு படுகொலைகள் சம்பவத்தில் குஞ்சுக்கோயா(வயது 32) என்பவரைக் கொலைச்செய்த வழக்கில் குற்றவாளிகள் என நேற்று நீதிமன்றம் அறிவித்த 3 பேருக்கு இன்று ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது. முதல் குற்றவாளி பிபிஷ்(வயது 37), இரண்டாவது குற்றவாளி ஹிந்து ஐக்கியவேதி மாநிலப் பொதுச்செயலாளர் சுரேஷ், மூன்றாவது குற்றவாளி விஜேஷ்(வயது 31) ஆகியோருக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. அபராதத் தொகையில் 50 ஆயிரத்தை கொலைச் செய்யப்பட்ட குஞ்சுக்கோயாவின் குடும்பத்தினருக்கு அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக