வியாழன், 12 மே, 2011

அமெரிக்க சட்ட விதிமுறைகளை மீறி உள்ளது- உமர் பின் லாதன் அறிவிப்பு.

மே 2 ஆம் தேதி பாகிஸ்தான் அபோதாபாத்தில் பதுங்கி இருத்த உஸாமா பின் லாதன் அமெரிக்க ராணுவ படையால் சுட்டு கொல்லப்பட்டார் . அவரின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதற்கு உஸாமாவின் 4 வது மகன் ஆன உமர் பின் லாதன்  கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வளைகுடா நாட்டில் தங்கியுள்ள இவர் இணையத்தளத்தில் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் உஸாமா பின் லாதன்  கொன்றதற்கு அமெரிக்கா மீது சட்ட பூர்வமாக நடவடிக்கை எடுக்க எங்களுக்கு அதிகாரம் உண்டு எனவும். மேலும் அவர் கொள்ளபட்டதற்கான காரணத்தை அமெரிக்கா அதிபர் ஒபாமா தெளிபடுத்த வேண்டும் எனவும். அவரது உடலை கடலில் விசியுள்ளனர். இது மனிதாபிமான ரீதியாகவும் ,மத ரீதியாகவும் எற்றுகொள்ளபடாது எனவும். இதன் மூலம் எங்கள் குடும்பத்தையும் ஆதரவாளரையும் அமெரிக்கா அவமதித்து விட்டது எனவும் கடிதத்தில் கூறப்பட்டதாக குறிபிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக