வியாழன், 23 ஜூன், 2011
அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சக்ராமென்டோ நகரைச் சேர்ந்தவர் காயாங்க் (29). இவரது குழந்தை அடம் பிடித்து அழுது சேட்டை செய்தது. இதனால் எரிச்சல் அடைந்த காயாங்க், குழந்தையை அடித்து உதைத்தார். பலமாக தாக்கியதால் குழந்தை இறந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கொலையை மறைக்க குழந்தையின் உடலை மைக்ரோ ஓவனுக்குள் வைத்து மறைத்து விட்டார். பிறகு போலீசில் போன் செய்து தனது குழந்தை தெரியாமல் மைக்ரோ ஓவனுக்குள் புகுந்து விட்டது. இதில், உடல் வெந்து இறந்து விட்டது என கூறினார்.
போலீசார் விரைந்து வந்து மைக்ரோ ஓவனுக்குள் இருந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அடித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து காயாங்க் போலீசில் உண்மையை ஒப்புக் கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

0 comments:
கருத்துரையிடுக