வியாழன், 23 ஜூன், 2011

டெல்லியில் தீ விபத்தில் 6 சிறுவர்கள் உள்பட 22 பேர் காயம்

டெல்லி கிழக்கில் உள்ள குரேஜி பகுதியில் இன்று சுமார் ஆயிரம் மீட்டர் நீளம் உள்ள உயர் அழுத்த மின்சார கம்பி ஒன்று குடியிருப்பு பகுதியில் அறுந்து விழுந்தது. இதில் அங்கிருந்த வீடுகள் தீப்பற்றி எரிய தொடங்கின. இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், சிறிது நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 6 சிறுவர்கள் உள்பட 22 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். மின்சார வயர் அறுந்து விழுந்ததற்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.

0 comments:

கருத்துரையிடுக