ஞாயிறு, 26 ஜூன், 2011

மின்வெட்டு நேரம் குறைப்பு

கடந்த ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள மக்கள்கள் கடுமையான மின்வெட்டை சந்தித்து வந்தார்கள் பல இடங்களில் அறிவிப்பு நேரங்களை தவிர் கூடுதல் நேர மின்வெட்டையும் சந்தித்துள்ளார்கள். இதனால் தொழில்களும், விவசாய பணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஆட்ச்சியில் வெற்றி பெற்ற ஆ.தி.மு.க தலைவருமான முதலமைச்சருமான செல்வி ஜெயலலித்தா அவர்கள் முன்பே அறிவித்தபடி தமிழ்நாட்டில் மின் வெட்டை குறைத்து வருகிறார். அணைகள் திறக்கப்பட்டதால் நீர் மின் நிலையங்கள் செயல்பட தொடங்கி விட்டன. மேலும் காற்றலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரமும் அதிகரித்துள்ளதால் காற்றலைகள் மூலம் மின்சாரம் அதிகமாக கிடைக்கும் நேரத்தில் மின்சாரம் நிருத்தபோவதில்லை மேலும் காற்றலைகள் மூலம் மின்சாரம் குறைந்தால் மட்டுமே மின்சாரம் நிறுத்தப்படும். எனவே தற்போது சென்னை தவிர மற்ற ஊருகளில் ஏற்க்கனவே நடந்த 3 மணி நேர மின் வெட்டு தற்போது 1 :30 மணி நேரமாக குறைக்கப்பட்டது.மேலும் வருகிற 1 ஆம் தேதி முதல் மின்வெட்டை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் செல்வி ஜெயலலித்தா உத்தரவுவிட்டுள்ளார். 

0 comments:

கருத்துரையிடுக