செவ்வாய், 6 செப்டம்பர், 2011

தமிழக அரசு வழங்கும் இலவச பொருட்களை விற்றால் தண்டனை


முதலமைச்சர் செல்வி ஜெயலலித்தா முன்பு அறிவித்தபடி இலவச பொருட்களான மிக்சி,கிரைண்டர்,மின் விசிறியை வழங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக தமிழக உணவு பொருட்கள் வழங்கல் கழகத்தின் சார்பில் டெண்டர் அறிவிக்கப்பட்டு இலவச பொர்ட்களான மிக்ஸி,கிரைண்டர் மற்றும் மின்விசிறியை தயாரிக்க மொத்தம் 18 நிறுவங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செயப்பட்டுள்ளது. மேலும் முதற்கட்டமாக இந்த இலவச பொருட்களின் விநியோக்கத்திர்க்கு தமிழக அரசு ரூபாய் 1 கோடியே 250 ரூபாயை ஒதிகியுள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெயலலித்தா வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தா நாளன்று இலவச பொருட்களை வழங்கும் திட்டத்தை துவக்க இருக்கிறார். முதற்கட்டமாக தலா 25 லட்சம் பொருட்கள் வழங்க உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பச்சை ரேஷன் கார்ட்தாரர்களுக்கு இந்த இலவச பொருட்களான மிக்ஸி,கிரைண்டர் மற்றும் மின்விசிறி ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்து பேகிங் செய்து வழங்கப்படும். மேலும் அரசு சார்பில் வழங்க இருக்கும் தரமான நிருவனங்காளால் தயாரிக்கப்பட்ட இந்த இலவசமாக கிடைக்கும் பொருட்களை எந்த வித காரணத்தை கொண்டு விற்க கூடாது என்றும், எளியவர்களாக உள்ளவருக்கும், வாங்க சக்தி பெறாதவர்களுக்கும் முன்னேற்றவகையில் வழங்கப்படும் இந்த இலவச பொருட்களை விலைக்கு வாங்குவதும், விலைக்கு கொடுப்பதும் சட்டப்படி குற்றம் என்றும், அரசு அன்பளிப்பாக தரும் பொருட்களை விர்ப்பவர்களுக்குமின்றி வாங்குபவர்களுக்கும் இந்திய அடிப்படை குடிமை சட்டப்படி தண்டிக்க இடம் உண்டு என்றும், இலவச அரிசியை விர்ப்பவர்களுக்கு குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கூடும் என்றும், மேலும் அரசு வழங்கும் இந்த இலவச பொருட்களை விற்க முடியாத அளவிற்கு "இது அரசின் அன்பளிப்பு விர்ப்பனைக்கல்ல" என்ற வாசகங்களை அச்சடித்தோ அல்லது அளிக்க முடியாத வகையிலோ பதிக்க பரிசீலித்து வருவதாக சிறப்பு திட்ட அமலாக்கத் துறையில் இடம்பெற்றுள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 comments:

கருத்துரையிடுக