
திங்கள், 5 செப்டம்பர், 2011
ஒரே குடுபத்தை சேர்ந்த இந்தியர்கள் 3 பேர் துபாயில் தற்கொலை

ஐக்கிய அரபு நாடான துபாயில் உள்ள அல் கைமா என்ற இடத்தில் அக்கம்பக்கம் உள்ளவர்கள் பூட்டி இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வெளியாகிறதாக காவல் துறையில் புகார் கொடுத்துள்ளார்கள். இந்த புகாரின் அடிப்படையில் அப்பகுதி காவல் துறை உயர் அதிகாரியான ஒருவர் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன்,மனைவி மற்றும் மகள் 3 பேரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பூட்டியிருந்த வீட்டினுள் உள்ள ஹால் சீலிங்கில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தவருக்கு 44 வயது மதிக்கத்தக்கது என்றும், படுக்கை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தவருக்கு 31 வயது மதிக்கத்தக்கது என்றும், மற்றொரு அறையில் முகத்தில் பிளாஸ்டிக் பையால் மூடியப்படி இருந்த பெண் குழந்தைக்கு 8 வயது மதிக்கத்தக்கது என்றும், கைப்பட்ரப்பட்ட இவ்மூவரின் உடலை தடவியல் சோதனைக்காக அனுப்பி உள்ளதாகவும், மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் தற்கொலை செய்து கொண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் இந்தியர்கள் என தெரிய வந்தது என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
0 comments:
கருத்துரையிடுக