
வியாழன், 8 செப்டம்பர், 2011
டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிப்பு

நேற்று காலை சரியாக 10:17 மணியளவில் டெல்லி உயர்நீதி மன்றத்தில் 5 ஆம் நுழைவு வாயிலில் திடிரென்ன சக்தி வாயிந்த குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்தது. இந்த பயங்கர குண்டு வெடிப்பில் 45 பேர் காயமடைந்து மேலும் இரண்டு பேர் உயிர் இழந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் டெல்லி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் மீட்ப்பு பனி தீவீரமாக நடந்து வருகிறது.இந்த பயங்கர குண்டு வெடிப்பிற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இந்தியாவின் முக்கிய இடமான டெல்லி உயர்நீதி மன்ற வளாகத்தில் தடவியல் நிபுணர்கள் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் வெடிகுண்டில் 2 கிலோ வெடி மருந்து கலந்து இருக்க கூடும் என்றும், 2 கிலோ வெடி மருந்து கலந்த வெடி குண்டு சூட்கேசினுள் வைத்திருக்க கூடும் என்றும், குண்டு வெடிப்பு நடந்த இடமான டெல்லி உயர்நீதி மன்ற வளாகத்தின் 5 வது நுழைவு வாயிலில் 2 அடி ஆழத்தில் ஒரு அடி ஆழத்தில் பள்ளம் ஏற்ப்பட்டதாகவும், தடவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் இந்த வெடி குண்டில் கலந்திருக்கும் 2 கிலோ வெடி மருந்தில் அமோனியம் நைட்ரேட் மற்றும் பி.இ.டி.என் என்ற பயங்கர வெடி மருந்து கலந்திருப்பதாகவும், இந்த பி.இ.டி.என் வெடிமருந்து அதிக அளவில் தீவிரவாதிகள் தான் பயன்படுத்தி வருவதாகவும், கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த ஷூ குண்டு வெடிபில், கடந்த 2009 ஆம் ஆண்டு பிலிபைன்சில் நடந்த குண்டு வெடிப்பிலும், கடந்த 2010 ஆம் ஆண்டு லண்டன் மற்றும் துபாய் விமானங்களில் வைத்துருந்த வெடி குண்டிலும் இந்த பி.இ.டி.என் என்ற வெடிபொருள் கலந்திருந்ததாகவும் செய்திகள் வெளியாகயுள்ளன.மேலும் இந்த டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தால் சென்னையில் உள்ள நீதி மன்றங்களில் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிபிடத்தக்கது.
0 comments:
கருத்துரையிடுக