
வியாழன், 8 செப்டம்பர், 2011
கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை சாலை நீடிப்பு

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலித்தா அவர்கள் நேற்று நடந்த சட்டசபையில், தென்மாவட்டங்களில் உள்ள தூத்துக்குடி,திருச்செந்தூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் மக்கள் விடுத்த நீண்ட நாள் கோரிக்கைப்படி கிழக்கு கடற்கரை சாலை கன்னியாகுமரி வரை நீடிக்கப்படும் என தெரிவித்தார். மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு பல்வேறு உள்கட்டமைப்புகளில் தொழில், சாலை போக்குவரத்து போன்ற முக்கிய துறைகளின் வேகமான வளர்ச்சிக்கு சாலை உள்கட்டமைப்புல்கள் தான் முக்கிய பங்கு வகிக்கிறது,இதன் அடிப்படையில் ஆசிய மற்றும் உலக வங்கி நிதி உதவியுடன் சென்னை முதல் தூத்துக்குடி வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலை அகலப்படுத்தப்பட்டு வந்தது.மேலும் தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 113 சாலை பகுதியில் ரூபாய் 250 கோடி செலவில் இருவழித் தடமாக அகலப்படுத்தப்பட்டு சாலை பனியின் கீழ் 9 புறவழி சாலைகள், 3 பெரிய பாலங்கள், 1 ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என்றும், இதேபோன்று சிவகங்கை நகரங்களில் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் நில எடுப்பு பணிகள் மேற்கொண்டு 10௦.60 கிலோமீட்டர் நீளத்தில் சிவகங்கை புறவழிச் சாலையும், எடாபடி புறவழி நகரங்களில் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் நில எடுப்பு பணிகள் மேற்கொண்டு 8 .60 கிலோ மீட்டார் நீளத்தில் எடாப்படி புறவழிச் சாலையும் அமைக்கப்படுவதால் சிவகங்கை மற்றும் எடாபடி நகரங்களில் போக்குவரத்து நெரிசல்கள் பெருமளவு குறைக்கப்படும். மேலும் நடப்பாண்டில் ரூபாய் 151 கோடி மதிப்பீட்டில் 18 மாவட்டங்களை 65 பாலங்கள் கட்டப்படும் என்றும், இதன்படி பயண நேரத்தையும் தூரத்தையும் வெகுவாக குறைக்க கூடும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலித்தா நேற்று நடந்த சட்டசபையில் தெரிவித்தார்.
0 comments:
கருத்துரையிடுக