செவ்வாய், 15 செப்டம்பர், 2009

தொடரும் இஸ்ரேலின் பாலஸ்தீன ஆள்கடத்தல்

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் காசாவிலிருந்து மூன்று பலஸ்தீனியர்களை கடந்த திங்கள் கிழமை கடத்திச்சென்றுள்ளனர்.
அப்பகுதி மக்கள் இதைப்பற்றி கூறுகையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் தங்கள் பகுதியில் நுழைந்து 3 பேரை கடத்திச்சென்றதாகவும், பாலஸ்தீனிய போராளிகள் இதற்கு பதிலடி கொடுப்பதற்காக ஒரு RPG, மற்றும் 3 Mortar களை சுட்டதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், நாதியா ஹம்தான் என்ற 26 வயதுள்ள ஒரு பெண்ணையும், ஹனா அல்-ஷலபி என்ற 22 வயது பெண்ணையும் பருகின் கிராமத்திலுள்ள அவர்களது குடும்பத்திலிருந்து இஸ்ரேலிய ஆக்ரமிப்பு படைகள் கடத்திச்சென்றுள்ளன..

0 comments:

கருத்துரையிடுக