புதன், 12 ஆகஸ்ட், 2009

ரமளான் : கண்ணியமிக்க விருந்தாளி

உன்னதமான பருவகாலம்

இது ஒரு உன்னதமான பருவகாலமாகும். இம்மாதத்தில் அல்லாஹ் ஏராளமான கூலிகளை வழங்குகின்றான். ஏராளமான அருட்கொடைகளை அளிக்கின்றான். இது நன்மைகள் மற்றும் அருட்கொடைகளின் மாதம். வெகுமதிகள் மற்றும் அன்பளிப்புகளின் மாதம்.

இந்த மாதத்தைப் பற்றி இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான்:

ரமளான் மாதம் எத்தகையதெனில் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதாகவும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக் கூடியதாகவும் உள்ள குர்ஆன் இறக்கியருளப்பட்டது.

இதையே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் :

இறையருளும் பாவமன்னிப்பும், நரகத்திலிருந்து விடுதலையும் சூழ்ந்திருக்கும் மாதம். ஆம், இம்மாதத்தின் ஆரம்பம் அருள்மிக்கதாகவும் நடுப்பகுதி பாவமன்னிப்பை வழங்கக் கூடியதாகவும், இறுதிப் பகுதி நரக நெருப்பிலிருந்து விடுதலை செய்யக் கூடியதாகவும் உள்ளது.

மேலும், ரமளான் மாதம் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. மேலும், ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றது (நூல் : புகாரி )

தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் பண்ணவும்

0 comments:

கருத்துரையிடுக