செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

பாபர் மசூதி பைல்கள் தொலைந்த வழக்கில் சிபிஐ அறிக்கை தாக்கல்


அயோத்தி-பாபர் மசூதி விவகாரம் தொடர்பான 23 பைல்கள் தொலைந்துபோன வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் இடைக்கால விசாரணை அறிக்கையை சிபிஐ இன்று தாக்கல் செய்தது.

காணாமல் போன 23 பைல்களில் 10 பைல்கள் சிபிஐ விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாகவும் மீதியுள்ள 13 பைல்களைத் தேடும் பணி நடந்து வருவதாகவும் இந்த அறிக்கையைத் தாக்கல் செய்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அசோக் நிகாம் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்தப் பணியில் உத்தரப் பிரதேச அரசு சிபிஐக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

1949-50களில் அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு எழுதிய குறிப்புகள் அந்த பைல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

0 comments:

கருத்துரையிடுக