வியாழன், 17 செப்டம்பர், 2009
ஆப்கானிஸ்தானில் கார் குண்டுவெடிப்பில் 10 பேர் பலி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 10 பேர் பலியாயினர் ; 50 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் அமெரிக்க இராணுவ தளம் அருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரின் மூலம் நேட்டோ படையினரின் இரண்டு வாகனங்களின் பின்புறம் இடித்து குண்டு வெடிக்கச் செய்யப்பட்டது. இதில் 10 பேர் பலியானதாகவும், 50 க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் துறை பேச்சாளர் முகமத் ஷாகீர் ஆஸ்மி தெரிவித்தார்.
Labels:
ஆப்கானிஸ்தான்,
குண்டு வெடிப்பு
0 comments:
கருத்துரையிடுக