
அகில இந்திய காங்கிரஸின் புதுவை முன்னாள் முதல்வரும், சவுதி அரேபியாவில் இந்திய ஹைகமிஷனராக சிறப்பாக பணியாற்றி ய M.O.H பரூக் மரைக்காயருக்கு இந்தியாவில் கவர்னர் பதவி வழங்கப்பட போவதாக கடந்த சில மாதங்களாக காங்கிரசார் மத்தியில் பேச்சு எழுந்து வந்தது. தற்போது இதனை உண்மைப்படுத்தும் விதமாக பாரூக்கை ஜார்கண்ட் மாநில கவர்னராக குடியரசு தலைவர் பிரதிபா பாட்டில் நியமித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் தற்போதுள்ள அரசியல் நிலை மற்றும் அம்மாநிலத்தில் நிலவிடும் சூழ்நிலையினை சுமூகப்படுத்த அனுபவம் வாய்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென்று மத்திய அரசு கருதிய நிலையில், அந்த மாநிலத்தில் பரூக்கை கவர்னராக்க காங்கிரஸ் தலைமை முடிவெடுத்தது. இதன்படி எம்ஓஹெச் பரூக் ஓரிரு வாரங்களில் ஜார்கண்ட் சென்று பதவியேற்க உள்ளார். இதில் புதுவை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். பரூக்கிற்கு கவர்னர் பதவி தரப்பட்டுள்ளதால் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக