வெள்ளி, 18 பிப்ரவரி, 2011
மொசம்பிக் நாட்டில் கடலில் கப்பல் மூழ்கி 50 அகதிகள் பலி
ஆப்பிரிக்க நாடான சோமாலியா மற்றும் எத்திபோப்பியாவை சேர்ந்த 129 அகதிகள் தென் ஆப்பிரிக்காவில் குடியேறுவதற்காக கப்பலில் சென்றனர். மொசம்பிக் அருகே அந்த கப்பல் சென்ற போது கப்பலில் விரிசல் ஏற்பட்டு உடைந்தது. கப்பலுக்குள் தண்ணீர் புகுந்து கடலில் மூழ்கியது. கப்பலில் இருந்த அனைவரும் கடலில் மூழ்கினார்கள். இதை பார்த்த மீனவர்கள் அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட னர். 60-க்கும் மேற்பட்டோரை அவர்கள் காப்பாற்றினார்கள். ஆனால் 50 பேர் கப்பலில் மூழ்கி இறந்து விட்டனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. மீட்கப்பட்ட மொசம்பிக் நாட்டில் உள்ள பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக