ஞாயிறு, 5 ஜூன், 2011
சவூதி அரேபியாவின் "நிடாகத்" திட்டம்
(சவூதி) உள்நாட்டு மக்களின் வேலை இல்லாத் திண்டாட்டத்தினை நீக்கஅரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முனைகின்றது. முன்னர், அரசுநிறுவங்களில் "சவூதிமயமாக்கல்" திட்டத்தின் வாயிலாக, அரசு மற்றும்அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் குறிப்பிட்ட சதவீத மக்கள்அந்நாட்டின் மண்ணின் மைந்தர்களாக இருக்கவேண்டும் என சட்டம் இயற்றிசெயற்படுத்தியது. அதோடின்றி, சில துறைகளையும், பதவிகளையும் கட்டாயமாகசவூதியினரே இருக்கவேண்டுமெனவும் வற்புறுத்தியது. இதனை தனியார் துறையினிலும்பின்பற்றக் கோரி நீண்ட காலமாக அறிவுறுத்தியது. அவர்களும் முன்னரெல்லாம் பெயரளவில், உரிமையாளரின்உறவினர்களோ அல்லது உயர்பதவியிலுள்ளவர்களின் பரிந்துரையினிலோ மண்ணின் மைந்தர்கள்சிலரை பணிநியமனம் செய்துக் கொள்வர். அப் பணியாளர்களில் பலர் சம்பளத்தேதியன்றுமட்டும் வந்து கையெழுத்திட்டு, பணக் கவரைப்பெற்றுக்கொண்டு காணமல் போகின்ற வரலாறும் உண்டு என எனக்குமுன்பிலிருந்தே இருப்பவர்கள் அடிக்கடி நினைவுக் கூர்வதும் உண்டு..
ஆனால் இப்பொழுதெல்லாம் நிலவரம் அப்படியில்லை. கடுமையான, உடல் மற்றும்மூளை உழைப்பிற்கும் குறிப்பிடும் படியான தொகையினில் சவூதியினர் இருக்கின்றனர்என்பதே ஆரோக்கியமான உண்மை! இருப்பினும் இவர்களின்சதவிகிதம் குறைவு என உள்நாட்டு தொழில் முனைவோர்களே கருதுவதாலும், உள்ளூர் மக்கள்என்பதால் அவர்களுக்கு வழங்கப் பட வேண்டிய ஊதியமும் சலுகைகளும் அதிகம் என்பதாலும், உற்பத்திமற்றும் சேவைகளின் தரத்தினில் குறை நேர்ந்திடக் கூடாது என்பதினாலும் தனியார்துறையினர் பெருமளவில் அயல் நாட்டவரினையே நாடுகின்றனர். குறிப்பாக, இந்தியா, பிலிப்பைன்ஸ், வங்கதேசம், சிறீலங்கா....எனக் குறிப்பிட்ட நாட்டவர்களுக்கு வேலையின் தன்மைக்கேற்ப முக்கியத்துவம்தருகின்றனர். (ஒரே பணியினை ஒருஇந்தியரையும், மேற்கத்தியரையும்அமர்த்தினால் நம்மை விட கிட்டதட்ட 3 லிருந்து 6 மடங்கு வரைஅதிகமான ஊதியம் அவர்களுக்கு வழங்க வேண்டிவரும். ஏனெனில் அவர்களின்நாணயத்தின் மதிப்பு, சர்வதேசச் சந்தையினில் நம்மை விட அதிகம்.)
மலிவான தொகையில் தரமான சேவை கிடைக்கும் போது இங்குள்ளவர்கள்உள்நாட்டு மனித வளத்தைவிட அயல்நாட்டினரையே விரும்புகின்றனர். இங்கு சுமார் 8 1/2 மில்லியன் (85 இலட்சம்)மக்கள் அயல்நாட்டிலிருந்து பணிபுரிபவர்கள் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகின்றது இதனால் உள்ளூர்மக்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் எழுகின்றது. இதனைப் போக்கவே "நிடாகத்" எனும் புதியதிட்டத்தினை உருவாக்கி விரைவில் செயல் வடிவம் கொடுக்க முனைகின்றனர்.
தன் நாட்டில் தனக்கு வேலை இல்லாது மற்ற நாட்டவ்ர்களுக்கு மட்டும்இடமளித்தால் எந்தவொரு குடிமகனும் கொந்தளிக்கத் தானே செய்வர். அதனை தவிர்க்கவும், வருடத்திற்கு 100 பில்லியன்ரியால்கள் (தோராயமாக 1 ரியால் = 12 ரூபாய்) தன்நாட்டைவிட்டு வெளியேறுவதை இயன்ற அளவிற்க்கு தடுக்கவும் "நிடாகத்" எனும்இத்திட்டத்தினை பயன்படுத்த விழைகின்றனர்.
என்ன தான் கூறுகின்றது இந்த "நிடாகத்"?
ஒரு நிறுவனத்தின் மனிதவளங்களில் எத்தனை உள்ளூர்வாசிகள் இருக்கின்றனர்என்பதினைக் கணக்கில் கொண்டு மூன்று வகையாக "சிகப்பு, மஞ்சள் & பச்சை" எனஅந்நிறுவனங்களை பிரிக்கின்றனர்..
'சிகப்பு' என்பது அரசு கூறும்நெறிமுறைகளை கண்டுக்கொள்ளாத சவூதி மயமாக்கலில் பங்கேற்காதநிறுவனங்கள்.
'மஞ்சள்' என்பது அரசின்நெறிமுறைகளை நிறைவுச் செய்யாது பகுதி அளவு பின்பற்றும் நிறுவனங்கள்.
'பச்சை' என்பது அரசின்நெறிமுறைகளை வழுவாது பின்பற்றுபவர்கள்.
சவூதில் இப்போது நம்மவர்கள் (அவர்களின் பார்வையின் படி நாம்மட்டுமல்ல... அரேபியர்கள் அல்லாத அனைவருமே அயல்நாட்டவர்கள்) பணிபுரியும்நிறுவனங்களின் வண்ணத்தினைப் பொறுத்தே சவூதியில் தொழிலாளிகளின் 'இகாமா' என்கின்ற "சவூதி வசிப்பிடசான்றுரிமை"யினை 1 அல்லது 2 வருடங்களுக்குஒருமுறை மீள் பதிவு செய்ய வரும்போது, அவர்கள் 6 ஆண்டுகளைகடந்தவராக இருப்பின், அதனை அங்கீகரிக்கவா அல்லது வேண்டாமா என முடிவுசெய்வர். நம்மவர்கள் பணிபுரியும் நிறுவனம் "சிகப்பு" அந்தஸ்துபெற்றிருப்பின், மேற்கொண்டு சவூதியில் வசிக்கமுடியாது."மஞ்சள்"நிற அந்தஸ்துபெற்றிருப்பின், "நிடாகத்"தின் விதிகளை நிறைவுச்செய்யும் வரை"சவூதி வசிப்பிடச் சான்றுரிமை"யினை அயலகத்தொழிலாளர்களுக்கு வழங்காது. "பச்சை" நிற அந்தஸ்துகொண்டவ்ர்களுக்கு எவ்வித சிக்கலுமில்லை.
இது தவிர, அரசின் பரிந்துரைகளுக்கும் அதிகமாக தன் நாட்டுமக்களை நியமிக்கும் நிறுவனங்களுக்கு "பிளாட்டினம்" அந்தஸ்தினைஉருவாக்கி பல சலுகைகளை வழங்குகின்றது. இத் திட்டம் குறித்துஎழும் ஐயங்களுக்கு விளக்கமளிக்க தொழிலாளர் அமைச்சகம் தயாராகஉள்ளது.
'இகாமா' மீள்பதிவு இல்லையெனில் இங்கு சவூதியில்மேற்கொண்டு வசிக்க இயலாது என்பது மட்டுமல்ல மீறி நாம் இருப்பின் சிறைச்சாலை உறுதிதான். 'இகாமா'வினை மையமாகக்கொண்டு தான் வங்கி கணக்கு, மருத்துவம், காப்பீடு என அனைத்தையும் செயற்படுத்தஇயலும்.
இந்த "நிடாகத்" திட்டம், "சிகப்பு மற்றும் மஞ்சள்" நிற அந்தஸ்துகொண்ட நிறுவனங்களில் பணிபுரிபவ்ர்களுக்கே சிக்கல். இருப்பினும் இதில்ஒரு மகிழ்வுக்குரியசெய்திஎன்னவெனில், "சிகப்பு அல்லது மஞ்சள்" நிற அந்தஸ்துநிறுவனங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் "பச்சை" நிற அந்தஸ்துக்கொண்ட நிறுவனங்களில் பணிபுரிய வாய்ப்புக் கிட்டினால், முன்னாள்நிறுவனத்தின்"பணிக்கான தடையில்லாச் சான்றிதழ்" NOC (No ObjectCertificate) இன்றியே நேரடியாக அந்நிறுவனத்தில் சேர இயலும். இது வளைகுடாவிலேயேபணி புரிய விழைபவர்களுக்கு ஒரு மிகப்பெரும் வரப்பிரசாதம்.
ஒன்றை நாம் நன்றாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். என்றிருந்தாலும்நாம் வளைகுடாவிற்கு அந்நியர்கள்! எதுவும் நடக்கலாம்!! எப்போதும் நடக்கலாம்!! "சொர்க்கமேஎன்றாலும் அது நம் ஊரைப்போலவருமா?" எனும் உண்மையினைஉணர்ந்து மனதைப் பக்குவப்படுத்திக்கொண்டால் இது போன்ற அறிவிப்புகள் நம் மனதினைப்பாதிக்க வாய்ப்பில்லை. மனதளவில் ஊர்ப்பக்கம் செல்ல நினைத்தாலும், பல்வேறுபிணைப்புகளிலும், நிர்ப்பந்தங்களிலும் சிக்குண்டுள்ள நம்மை, இயற்கையேஇந்நாட்டின் விதிமுறைகள் மாற்றம் வாயிலாக தாயகம் நம்மை திரும்பஅழைக்கின்றது என மகிழ்வோம்! கலவரம் வேண்டாம். களிஉவகை கொள்வோம்!! பக்ரைனிலும், ஏமனிலும் புரட்சிவெடித்திருப்பதால், சவூதியில் எழுந்துள்ள இப் பொறி விரைவில் மற்ற வளைகுடாநாடுகளுக்கும் பரவும் வாய்ப்பு மிகவும் அதிகம்!
குறிப்பு: இவர்கள் நினைப்பது போல்அந்நிய நாட்டினரின் மூளை மற்றும் உடல் உழைப்பினை அவ்வளவு எளிதினில் புறக்கணிக்கஇயலாது. அவ்வாறு முனைந்திடின் தற்போதுள்ள இயல்பு வாழ்க்கை தடம்புரண்டுவிடும் எனும்உண்மை இவர்களுக்கும் தெரியும்!

0 comments:
கருத்துரையிடுக