புதன், 31 ஆகஸ்ட், 2011

போலீஸ் கேட்டுக்கொண்டால் இஸ்லாமிய பெண்கள் முகத்திரை திறந்து காட்ட வேண்டும்: ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம்

ஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய பெண்கள் முகத்திரையை விலக்கி காட்ட வேண்டும் என்று அந்நாட்டு அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. காவல்துறையினர் கேட்டுக் கொண்டால் இஸ்லாமிய பெண்கள் தங்கள் முகத்திரையை விலக்கி காட்ட வேண்டும்.இல்லையெனில் கைதாக வேண்டி வரும் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி மற்றும் ஸ்பெயினின் சில பகுதிகளில் இஸ்லாமிய பெண்கள் தங்கள் முகத்தை மூடும் பர்கா அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஆஸ்ட்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களைக் கண்டறிய இஸ்லாமிய பெண்கள் தங்கள் முகத் திரையை விலக்கி, காவல்துறையினரிடம் காட்ட வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டது.
இந்த சட்டத்தை தற்போது விக்டோரியா மாகாணமும் பின்பற்றியுள்ளது.இதற்கான அதிகாரம் அந்த மாகாண காவல்துறையினரிடம் ஏற்கனவே இருந்த போதிலும் இனி இரு சக்கர வாகனங்களில் வரும் சந்தேகத்திற்குரிய நபர்களையும் இந்த புதிய உத்தரவின் கீழ் விக்டோரியா காவல்துறையினர் விசாரிக்க முடியும்.

0 comments:

கருத்துரையிடுக