வியாழன், 1 செப்டம்பர், 2011

அரியவகை பாம்புகளை பேன்ட் பாக்கெட்டில் வைத்து கடத்த முயற்சி


நேற்று அமெரிக்காவில் உள்ள மியாமி விமான நிலையத்தில் இருந்து பிரேசிலுக்கு ஒரு விமானம் புறப்படும் நிலையில் இருந்த போது அங்கிருந்த பயணி ஒருவர் உடைமைகள் சோதைனையின் போது வேகமாக கடந்த முயற்சித்தார். அப்பொழுது அந்த பயணி முழு உடலை பரிசோதிக்கும் இயந்தரத்தை கடந்த போது பாதுகாப்பு அதிகாரிகள் அவரது பேன்ட் பாக்கெட்டில் எதோ வித்தியாசமாக இருப்பதை கண்டனர். அதையறிந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பயணியை தனி அறைக்குள் அழைத்து சென்று அதிகாரிகள் முழு உடலையும் சோதனை மேற்கொண்ட போது அவரது பேன்ட் பாகேட்க்குள் பாலிதீன் பை இருப்பதை கண்டனர். அதை வெளியே எடுத்து பார்த்த போது அதில் அரியவகை இனத்தை சேர்ந்த 7 பாம்பு இருந்ததை கண்டு அதிர்ந்தனர். மேலும் சோதனையிட்டப் போது அவரது ஜட்டிக்குள் இருந்து சில நட்ச்சத்திர ஆமைகளையும் எடுத்தனர். இந்த சம்பவத்தால் மியாமி விமான நிலையத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது. மேலும் பாம்பு மற்றும் நட்ச்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற அந்த பயணியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments:

கருத்துரையிடுக