புதன், 31 ஆகஸ்ட், 2011

ஈத் பெருநாள்: ஆளுநர் ரோசய்யா, முதல்வர் வாழ்த்து

தமிழகத்தின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்க உள்ள கே.ரோசய்யா, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் இஸ்லாமியர்களுக்கு ஈத் பெருநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். 
கே.ரோசய்யா: நமக்குள் அன்பையும், பகிர்தல், ஈதல் உணர்வுகளையும் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஏற்படுத்த வேண்டும். குரானில் கூறப்பட்டுள்ள ஒற்றுமை, அமைதி, நல்லிணக்கத்துக்காக இத்திருநாளில் நம்மை அர்ப்பணிப்போம். தமிழகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கு எனது இதயங்கனிந்த ரம்ஜான் வாழ்த்துகள்.
முதல்வர் ஜெயலலிதா: மனித குலத்துக்கு வழிகாட்டும் நபிகள் நாயகத்தின் மணிமொழியை ஏற்று உடலையும், உள்ளத்தையும் ஒருமுகப்படுத்தி ஒருமாதம் நோன்பிருந்து ஏழைகள் மற்றும் தேவையுள்ளோர் மீது அனுதாபமும், பரிவும் செலுத்தி இஸ்லாமியப் பெருமக்கள் தங்கள் கடமையை நிறைவாகச் செய்து மகிழ்ந்திருக்கிறார்கள்.இந்த இனிய வேளையில், அன்பு ஓங்குக, அறம் தழைத்திடுக, சமாதானம் நிலவிடுக, சகோதரத்துவம் வளர்ந்திடுக என்று எனது உளங்கனிந்த ரம்ஜான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
thinakaran

0 comments:

கருத்துரையிடுக