திங்கள், 29 ஆகஸ்ட், 2011
முஸ்லிம்களுக்கு ரம்ஜான் விருந்து அளிப்பது போல, இந்துக்களுக்கு தீபாவளி விருந்து அளிக்க வேண்டும் :ராம.கோபாலன் பிதற்றல்
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் முஸ்லிம்களுக்கு ரம்ஜான் விருந்து அளிப்பது போல, இந்துக்களுக்கு தீபாவளி விருந்து அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் பிதற்றியுள்ளார். புதுச்சேரி இந்து முன்னணி சார்பில் ரெட்டியார்பாளையம் சுதாகர் நகரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ராம.கோபாலன் பேசியது: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் ஆண்டுதோறும் முஸ்லிம்களுக்கு ரம்ஜான் விருந்து அளிப்பது மதச் சார்பின்மைக்கு எதிரானது. சிறுபான்மையினர் என்று சொல்லி சலுகை வழங்கி அவர்களை ஈர்க்க நினைப்பது நடுநிலைக்கு அழகல்ல. முஸ்லிம்களை ரம்ஜான் விருந்துக்கு அழைப்பது போல், இந்துக்களை தீபாவளி விருந்துக்கு ஆளுநர் அழைக்க வேண்டும்.
முஸ்லிம் மத போதகர்களுக்கு உதவித்தொகை வழங்க உத்தேசம் இருப்பதாக முதல்வர் ரங்கசாமி பேரவையில் அறிவித்துள்ளார். ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ள என்.ஆர். காங்கிரஸ் அரசு, கிராம அர்ச்சகர்களுக்கும், கோயில் சிப்பந்திகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள அனைத்து கோயில்களிலும் அர்ச்சனை கட்டணம், சிறப்பு தரிசன கட்டணம் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் முதல்வர் ரங்கசாமி வரலாற்றில் இடம்பிடிப்பார்.
0 comments:
கருத்துரையிடுக