திங்கள், 29 ஆகஸ்ட், 2011
கடாபியால் இன்னமும் ஆபத்து உள்ளது : கிளர்ச்சிபடை தலைவர்
லிபிய அதிபர் மௌமர் கடாபி இன்னமும் மர்மாகவே பதுங்கியிருப்பதாகவும் அவரை தேடி கண்டுபிடிப்பதற்கு சர்வதேசம் ஒத்துழைக்க வேண்டுமெனவும் கிளர்ச்சியாளர்களின் தலைவர் முஸ்தாபா அப்தெல் ஜலைல் தெரிவித்துள்ளார். நேட்டோ கூட்டுப்படைகளுக்கு எதிரான கடாபியின் எதிர் தாக்குதல்கள் இன்னமும் ஆபத்தானவையாகவே இருக்கின்றன. லிபியாவுக்கு மாத்திரமல்ல, உலக நாடுகளுக்கும் அவை ஆபத்தானவை. அதனால் தான் அவரை பிடிப்பதற்கு கூட்டுப்படைகள் தொடர்ந்து ஒத்துழைப்பு தரவேண்டுமென கோருகிறோம் என தெரிவித்தார். லிபியாவுடன் தொடர்புபட்ட நாடுகளின் இராணுவ தலைவர்களை சந்தித்த அவர் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
தலைநகர் திரிபொரியை கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிளர்ச்சிக்குழு கைப்பற்றியதை தொடர்ந்து கடாபி நிலக்கீழ் சுரங்கப்பாதையின் ஊடாக சேர்ட் (Sirte) நகருக்கு தப்பியிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டது. அங்குள்ள பழங்குடியின மக்கள் கடாபிக்கு பூரண ஆதரவு கொடுத்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தேவையில்லாமல் இரத்த ஆறு ஓடுவதை தவிர்க்க வேண்டுமென்பதற்காக சேர்ட் நகர வாசிகளிடம் தாம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், எனினும் அவர்கள் எங்களுடன் ஒத்துழைக்க மறுத்துவிட்டார்கள் எனவும் முஸ்தாபா மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மீடியா
0 comments:
கருத்துரையிடுக