
புதன், 14 செப்டம்பர், 2011
துபாயில் 17 இந்தியர்கள் விடுதலை

துபாயில் உள்ள சார்ஜாவில் பஞ்சாப் மற்றும் ஹரியான மாநிலங்களை சேர்ந்த 17 இந்தியர்கள் சேர்ந்து பாகிஸ்த்தாநியரான மிஸ்ரி நசிர்கான் என்பவரை கொன்றனர். பாகிஸ்தானியரை கொலை செய்த 17 இந்தியர்களுக்கு சார்ஜா கோர்ட் கடந்த ஆண்டு மரண தண்டனை விதித்தது. மரண தண்டனை தீர்ப்பு வரும் வரையில் ஜெயிலில் இருந்த இந்த 17 இந்தியர்கள் கொலை செய்யப்பட்ட மிஸ்ரி நசிர்கான் குடும்பத்திற்கு குற்றவாளிகள் ரூபாய் 4.36 கோடி கொடுப்பதாக கோர்டில் கூறப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட மிஸ்ரி நசிர்கான் குடுபத்தினருக்கு ரூபாய் 4.36 கோடி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து குற்றவாளிகளான இந்தியாவைச் சேர்ந்த 17 பேரை சார்ஜா கோர்ட் விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்ட 17 பேர்களையும் இந்தியாவுக்கு விமானம் மூலம் அனுப்பிவைக்க இந்திய தூதரகம் ஏற்பாடு செய்து வருகிறது.
0 comments:
கருத்துரையிடுக